அவன் இவனிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பி: யூதாவின் ராஜாவே, எனக்கும் உமக்கும் என்ன? நான் இப்போது உமக்கு விரோதமாய் அல்ல, என்னோடே யுத்தம் பண்ணுகிற ஒருவனுக்கு விரோதமாய்ப் போகிறேன், நான் தீவிரிக்க வேண்டுமென்று தேவன் சொன்னார், தேவன் என்னோடிருக்கிறார், அவர் உம்மை அழிக்காதபடிக்கு அவருக்கு எதிரிடை செய்வதை விட்டுவிடும் என்று சொல்லச் சொன்னான் (2 நாளா. 35:21).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/NP9fQ2R4zeY
தேவ ஜனங்கள் அடுத்தவர்களின் காரியங்களில் தேவையில்லாமல் தலையிடக் கூடாது. வீண் வம்புகளை விலை கொடுத்து வாங்குகிறவர்களாய் காணப்படக் கூடாது. வழியே போகையில் தனக்கடாத வழக்கில் தலையிடுகிறவன் நாயைக் காதைப் பிடித்திழுக்கிறவனைப் போலிருக்கிறான் என்று நீதி. 26:17 கூறுகிறது.
யூதாவில் தோன்றின ராஜாக்களுள் யோசியா ஒரு நல்ல ராஜா. அவன் தன்னுடைய எட்டாவது வயதில் ராஜாவாகி, கர்த்தருடைய பார்வைக்குச் செம்மையானதைச் செய்து, தன் தகப்பனாகிய தாவீதின் வழிகளில் வலது இடது புறமாக விலகாமல் நடந்தான். அவனுடைய ராஜ்யபாரத்தின் பதினெட்டாம் வருஷத்திலே பஸ்காபண்டிகையை ஆசரித்தான். தீர்க்கதரிசியாகிய சாமுவேலின் நாள் தொடங்கி, இஸ்ரவேலிலே அப்படிக்கொத்த பஸ்கா ஆசரிக்கப்படவில்லை, யோசியாவும், ஆசாரியரும், லேவியரும், யூதாவனைத்தும், இஸ்ரவேலில் வந்திருந்தவர்களும், எருசலேமின் குடிகளும் ஆசரித்த பஸ்காவைப்போல இஸ்ரவேல் ராஜாக்களில் ஒருவரும் ஆசரித்ததில்லை. இப்படிப்பட்ட ஒரு நல்ல ராஜா, எகிப்தின் ராஜாவாகிய நேகோ ஐபிராத்து நதியோரமான கர்கேமிஸ் பட்டணத்தின்மேல் அசீரியர்களுக்கு ஆதரவாக, பாபிலோனியர்களுக்கு எதிராக யுத்தம்பண்ணம்படிக்கு வந்தான். நேகோ தன்னோடு யுத்தம் செய்ய வராதிருந்தும் யோசியா அவனுக்கு விரோதமாக யுத்தம் செய்யும்படிக்குச் சென்றான். அவன் இவனிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பி: யூதாவின் ராஜாவே, எனக்கும் உமக்கும் என்ன? நான் இப்போது உமக்கு விரோதமாய் யுத்தம் பண்ண வரவில்லை என்று கூறியும் இவன் வீண் வம்பை விலைகொடுத்து வாங்குவது போல அவனோடு யுத்தம் செய்யும்படிக்குக் சென்றான். ஆகையால் நேபோவுடைய வில் வீரர் யோசியா ராஜாவின்மேல் அம்பெய்தார்கள், அவன் கொடிய காயம்பட்டு காரணமில்லாமல் மரித்து போனான். அமத்சியா என்ற யூதாவின் ராஜாவும், யோவாஸ் என்று இஸ்ரவேலின் ராஜாவோடு, சாமாத்தியத்தைப் பார்ப்போம் வா என்று காரணமில்லாமல் அவனை வம்புக்கு அழைத்து பெரிய அழிவைச் சந்தித்தான்.
கர்த்தருடைய பிள்ளைகளே, ஊரார் வம்மை விலைகொடுத்து வாங்காதிருங்கள். உங்கள் நண்பர்கள், உறவினர்கள், உடன் விசுவாசிகள் காரியங்கள் எல்லாவற்றிலும் தேவையில்லாதபடி தலையிட்டு உங்கள் சமாதானத்தைக் கெடுத்துவிடாதிருங்கள். கர்த்தாவே, என் இருதயம் இறுமாப்புள்ளதல்ல, என் கண்கள் மேட்டிமையுள்ளவைகளுமல்ல, பெரிய காரியங்களிலும், எனக்கு மிஞ்சின கருமங்களிலும் நான் தலையிடுகிறதுமில்லை என்று சங். 131:1ல் தாவீது கூறினான். இருமாப்போடும், மேட்டிமையோடும் மற்றவர்களுடைய காரியங்களில் தலையிடாதிருங்கள். நான் கூறுவதையெல்லாம் மற்றவர்கள் கேட்க வேண்டும் என்றும் எண்ணாதிருங்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae