தேவாட்டுக்குட்டியானவருடைய கலியாணம் (The Marriage of the Lamb of God)

வெளி 19 : 7 நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதிசெலுத்தக்கடவோம். ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள் என்று சொல்லக்கேட்டேன்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/7u3mNXSzM0U

பழைய ஏற்பாட்டின் துவக்கம் கலியாணத்தில் ஆரம்பிக்கிறது. தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டுவந்தார் என்று ஆதி 2:22-ல் இந்த பூவுலகில் முதல் திருமணத்தை தேவனே நடத்தி வைத்தார் எனக் கூறுகிறது. பழைய ஏற்பாட்டின் முடிவும் கலியாணத்தில் முடிகிறது. அவர் ஒருவனையல்லவா படைத்தார்? ஆவி அவரிடத்தில் பரிபூரணமாயிருந்ததே; பின்னை ஏன் ஒருவனைப் படைத்தார்? சந்ததியைப் பெறும்படிதானே. ஆகையால் ஒருவனும் தன் இளவயது மனைவிக்கு யைத் துரோகம் பண்ணாதபடிக்கு, உங்கள் ஆவியைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்று மல்கி 2:15 கூறுகிறது. புதிய ஏற்பாட்டின் துவக்கமும் கலியாணத்தில் துவங்குகிறது. இயேசு கிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது: அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடி வருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது என்று மத் 1:18 கூறுகிறது. இயேசு செய்த முதல் அற்புதமும் கலியாண வீட்டில் தான் நடைபெற்றது (யோவா 2:1). மேற்குறிப்பிட்ட வசனத்தின் படி புதிய ஏற்பாட்டின் முடிவும் கலியாணத்தில் முடிவடைகிறது. ஆகையால் வேத புஸ்தகமே திருமணங்கள் நிறைந்த புஸ்தகமாக காணப்படுகிறது என்பதை நாம் அறிந்துகொள்ளலாம்.

ஆட்டுக்குட்டியானவர் மணமகன் என்று அழைக்கப்படுகிறார். மணமகன் செய்த இரத்த கிரயத்தினால் மணமகள் அதாவது சபை அதாவது நாம் அனைவரும் வாங்கப்பட்டோம். மனிதனோடு தேவன் இணைவதற்கு அடிப்படையான காரியமே கல்வாரி தான் என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும். மணவாளனின் கரத்தை மணவாட்டி பிடிக்க வேண்டுமென்றால், கல்வாரிக்கு வந்தே ஆகவேண்டும். ஆகையால் தான் இயேசு இங்கே ஆட்டுக்குட்டியானவர் என்று அழைக்கப்படுகிறார். இதே வெளிப்படுத்தல் புஸ்தகத்தில் அவர் உண்மையுள்ளவர், சத்தியமுள்ளவர், ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தர், தேவனுடைய வார்த்தை என்றெல்லாம் அழைக்கப்பட்டாலும், மணவாட்டியோடு தன்னை இணைக்க அவர் ஆட்டுக்குட்டியானவராக தன்னை அடையாளப்படுத்துகிறார். ஒரு ஆடு அடிக்கப்படுவதை போல இயேசு கல்வாரி சிலுவையில் அடிக்கப்பட்டார். அந்த கல்வாரிக்கு வராத எவரும் மணவாட்டி என்ற ஸ்தானத்தை அடைய முடியாது.

இவ்வுலகத்தில் மணமகள் மணமகனைத் திருமணம் செய்ய வரதட்சணை என்ற பெயரில் பெண்வீட்டாரைச் சுரண்டும் கிறிஸ்தவர்களும் அநேகமாய் பெருகிப் போய் காணப்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல என்று ஒரு மூத்த ஊழியக்காரர் கூறினார். ஆனால் பரலோக மணவாளனாகிய கிறிஸ்து இயேசுவை கரம்பிடிக்க மணவாட்டியாகிய நாம் கிலோ கணக்கில் தங்கம் கொடுக்கத் தேவையில்லை. அவர் கரத்தைப் பிடிக்க ஒரே தகுதி மணவாட்டியாகிய நாம் கல்வாரிக்கு வரவேண்டும் என்பதே. அங்கே தான் ஆட்டுக்குட்டியானவர் மணவாட்டியைச் சந்திப்பார். நீங்கள் கல்வாரிக்கு வந்து மணவாளனின் கரத்தை பிடிக்க ஆயத்தமா?

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org