சும்மா! (Just because)

     

தானி 4:29,30 பன்னிரண்டு மாதம் சென்றபின்பு, ராஜா பாபிலோன் ராஜ்யத்தின் அரமனைமேல் உலாவிக்கொண்டிருக்கும்போது: இது என் வல்லமையின் பராக்கிரமத்தினால், என் மகிமைப்பிரதாபத்துக்கென்று, ராஜ்யத்துக்கு அரமனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா என்று சொன்னான்.

For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/4yxU0434Z-w

நேபுகாத்நேச்சார் ராஜா தன் அரண்மனை மேல் சும்மா ‘உலாவிக் கொண்டிருக்கும்’  போது பெருமையான வார்த்தைகளை பேசினான் அதின் நிமித்தம் தேவனுடைய தண்டனை அவன் மேல் வந்தது புத்தியை இழந்து மிருகங்களுடனே சில காலம் இருந்தான் (Dan. 4).

       தாவீது ராஜா யுத்த காலத்தில் தன் அரண்மனை மேல் சும்மா  ‘உலாத்திக் கொண்டிருக்கும்’ போது ஸ்நானம்  பண்ணுகிற பெண்ணை கண்டு விபசாரம் மற்றும் கொலை பாவத்தில் விழுந்தான். அதின் நிமித்தம் பட்டயம் தாவீது வீட்டை விட்டு விலகாது என்ற தண்டனையை பெற்றான் (2 Sam. 11)

      தீனாள் தீட்டு பட்டதும், தேசத்து பெண்களை பார்க்க சும்மா புறப்பட்ட போதே! (Gen. 34)

இஸ்ரேல் ஜனங்கள் எகிப்தை விட்டு புறப்பட்ட போது  சந்தித்த முதல் யுத்தத்தில் மாத்திரம் தேவன் அவர்களை சும்மாய் இருங்கள் என்று கட்டளையிட்டார் (Exo. 14:14) அதன் பின்பு கானான் தேசத்தை சுதந்தரிக்கும் வரை எந்த இடத்திலும் (யுத்தத்திலும் ) அவர்களை சும்மாய் இருக்குங்கள் என்று சொல்லவில்லை.

      உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளப்போகிறதற்கு, நீங்கள் எந்தமட்டும் அசதியாயிருப்பீர்கள் (Jos. 18:3) என்று யோசுவா இஸ்ரேல் ஜனங்களை பார்த்து கேட்ட கேள்வி, நாமும் தேவனின் வாக்குத்தத்தங்களை சுதந்தரித்து கொள்வதற்கு அசதியாய் இருக்க கூடாது என்பதை உணர்த்துகிறது.

      சும்மா இருந்தால் அது முடிவில் பாவத்தில் கொண்டு போய் விடும். 1 தாலந்தை வாங்கினவன் செயல் படாமல் இருந்ததால் எஜமானின் கோபத்திற்கு ஆளாகி அழுகையும் பற்கடிப்புள்ள இடத்தில தள்ளப்பட்டான்.

      வீணான அரட்டை, சொற்களின் மிகுதியில் பாவம் இல்லாமல் போகாது என்ற வார்த்தையின் படி நம்மை கறைபடுத்திவிடும். இணையதளத்தில் வீணாய் செலவிடும் போது அது பாவத்திற்கு நேராக நடத்திவிடும்.

      பிதாக்கள் தங்களுக்கு தேவன் திறந்த வாசலை கொடுத்தபோது , அவருக்கு ஊழியம் செய்யாமலும் பாவத்தை விட்டு திரும்பாததாலும், பிள்ளைகள் அடிமைகளாய் போனார்கள் (Neh. 9:35-37)  என்ற நெகேமியாவின் விண்ணப்பம் நம்மை எச்சரிக்கிறது

அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்; ஆவியிலே அனலாயிருங்கள் கர்த்தருக்கு ஊழியம் செய்யுங்கள் – Rom. 12:11.

      The greatest tragedy in life is not death, but a life without a purpose.

B.Thivakar
Word of God Church
Doha – Qatar
www.wogim.org