மத் 20:33,34 அதற்கு அவர்கள்: ஆண்டவரே, எங்கள் கண்களைத் திறக்கவேண்டும் என்றார்கள். இயேசு மனதுருகி, அவர்கள் கண்களைத் தொட்டார்; உடனே அவர்கள் பார்வையடைந்து, அவருக்குப் பின்சென்றார்கள்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/8xw_JksUFpw
அவர்கள் எரிகோவிலிருந்து புறப்பட்டுப் போகையில், திரளான ஜனங்கள் அவருக்குப் பின்சென்றார்கள். அப்பொழுது வழியருகே உட்கார்ந்திருந்த இரண்டு குருடர், இயேசு அவ்வழியே வருகிறார் என்று கேள்விப்பட்டு: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டார்கள். இந்த இரண்டு குருடர்களுக்கும் தேவை இருந்தது. நம்முடைய வாழ்விலும் தேவைகள் இருக்கலாம். ஆனால் நம்முடைய தேவையையும், நம்முடைய ஆசையையும் ஒன்றாக இணைத்து நம்மை குழப்பிக்கொள்ளக்கூடாது. தேவை என்பது வேறு; ஆசை என்பது வேறு. என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார் என்று பிலி 4:19 கூறுகிறது. ஆங்கிலத்தில் God will supply all your needs என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆகையால் ஆண்டவரிடம் நீங்கள் கேட்கும் தேவைகளை நிச்சயமாக அவர் நிறைவேற்றுவார். ஒரு நான்கு வயது மகன் தகப்பனிடம் Bike கேட்டால், அந்த தகப்பன் நிச்சயமாக வாங்கி கொடுக்கமாட்டார். காரணம் அந்த மகன் ஓட்ட தெரியாமல் கீழே விழுந்துவிடுவான் என்பதற்காக. அதே மகன் தனக்கு சிறிய Cycle வேண்டுமென்றால், தகப்பன் நிச்சயமாக வாங்கிக்கொடுப்பார். அந்த மகன் பின்நாட்களில் வளர்ந்து பதினெட்டு வயதாகினப்பிறகு Bike கேட்டால், அப்பொழுது தகப்பன் வாங்கிக்கொடுப்பார். அதுபோல தான் நம்முடைய தகப்பனும் தேவைகளை நிச்சயம் பூர்த்திசெய்வார்.
இந்த குருடர்கள் தங்கள் தேவைகளை இயேசுவிடம் கேட்டபோது, அவர்கள் பேசாதிருக்கும்படி ஜனங்கள் அவர்களை அதட்டினார்கள். இப்படித்தான் நம்முடைய தேவைகளை ஆண்டவரிடம் கேட்கும்போது, அதற்கு தடையாக வருகிற பல காரியங்கள் சூழ்நிலைகள் உண்டாக நேரிடலாம். இருந்தாலும் இந்த இரண்டு குருடர்களை போல, ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று அதிகமாய்க் கூப்பிடுகிறவர்களாய் தேவ ஜனங்கள் காணப்பட வேண்டும். நம்முடைய தேவைகளை ஆண்டவரிடம் கேட்கும்போது தடையாக எந்த மனிதர்கள் வந்தாலும், அவர்களை நிராகரித்து இன்னும் அதிகமாய் ஆண்டவரிடம் கேட்கவேண்டும்.
இயேசு அவர்களிடம் நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்றிருக்கிறீர்கள் என்றார். குருடர்களை பார்த்தாலே அவர்கள் குருடர்கள், அவர்கள் பார்வையடைய வேண்டுமென்றே கூப்பிடுகிறார்கள் என்று நாம் கண்டுபிடித்துவிடலாம். ஆனால் இயேசு அவர்கள் வாயில் குறிப்பிட்டு கேட்கும்படி வலியுறுத்தினார். எனக்கு இரங்கும் என்பது பொதுவான ஜெபம். நான் பார்வையடைய வேண்டும் என்று கேட்பது குறிப்பிட்ட ஜெபம். இயேசு நாம் பொதுவாக அல்ல; குறிப்பிட்டு காரியத்தை கேட்கும்படியே விரும்புகிறார்.
அப்பொழுது இயேசு மனதுருகி, அவர்கள் கண்களைத் தொட்டார். இயேசுவின் இரண்டு செய்கையை கவனித்து பாருங்கள். பரம அழைப்புக்குப் பங்குள்ளவர்களாகிய பரிசுத்த சகோதரரே, நாம் அறிக்கைபண்ணுகிற அப்போஸ்தலரும் பிரதான ஆசாரியருமாயிருக்கிற கிறிஸ்து இயேசுவைக் கவனித்துப்பாருங்கள் என்று எபி 3:1 கூறுகிறது. நாம் எல்லா சூழ்நிலையிலும் இயேசுவை கவனித்து பார்க்கவேண்டும். இயேசு முதலாவதாக தனுக்குள்ளாக மனுதுருகினார். பிறகு, அவர்கள் கண்களை தன்னுடைய கைகளால் தொட்டு, அதை தன் செய்கையால் வெளிப்படுத்தினார். அவருடைய மனதுருக்கம் உள்ளானது, அவருடைய தொடுதல் வெளிப்படையானது. இன்றும் உங்கள் தேவைக்காக இயேசுவை நோக்கி கூப்பிடுகிற உங்கள் மீது அவர் உள்ளே மனதுருகுகிறார். சுகப்படுத்தமுடியாத பாகங்கள் மீது அவருடைய கைகள் வெளிப்படையாக படுகிறது. அப்பொழுது குருடர்கள் பார்வையடைந்து அற்புதத்தை பெற்றுக்கொண்டதுபோல, நீங்களும் அற்புதத்தை பெற்றுகொள்ளுவீர்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org