தேவனால் அழைக்கப்படுதல் (Called by God)

எபி 5:4. மேலும், ஆரோனைப்போல தேவனால் அழைக்கப்பட்டாலொழிய, ஒருவனும் இந்தக் கனமான ஊழியத்துக்குத் தானாய் ஏற்படுகிறதில்லை.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/Ej1Wgt6D1JY

தேவனுக்கென்று ஊழியம் செய்வதில் முதலாவது அழைப்பு காணப்படவேண்டும். தகுதியை வைத்தோ, திறமையை வைத்தோ, செய்யும் தொழிலை வைத்தோ, கர்த்தருடைய வேலை எதுவாக இருந்தாலும் சரி அதை செய்யலாகாது. இது மாற்ற முடியாத ஒரு கொள்கை. அடுத்த வசனம், இயேசு கூட தன்னை நமது பிரதான ஆசாரியராக நியமிக்கவில்லை என்று கூறுகிறார். பிதா தாமே அவரை நியமித்தார் என்று இயேசு கூறினார். அந்தப்படியே கிறிஸ்துவும் பிரதான ஆசாரியராகிறதற்குத் தம்மைத்தாமே உயர்த்தவில்லை; நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்று அவரோடே சொன்னவரே அவரை உயர்த்தினார் என்று வசனம் கூறுகிறது. அப்படியானால், நம் அழைப்பில் நாம் எவ்வளவு உண்மையாக இருக்க வேண்டும் என்று யோசித்துப்பாருங்கள்.

இன்றைய பரிதாபம் என்னவென்றால், இந்தியாவில் உள்ள பெரும்பாலான கிறிஸ்தவ அமைப்புகள், ஊழியர்கள், பாடல் பாடுகிறவர்கள், நடத்தினால் கவர்ச்சிக்கிறவர்கள், கூச்சலிடுபவர்கள் சம்பாதிக்க மாத்திரமே வேலை செய்கிறார்கள் என்பதை திட்டமாய் தேவ ஜனங்கள் அறிந்துகொள்ளவேண்டும். இந்த காரியத்தில் ஒருவரும் உங்களை வஞ்சித்துவிடாதபடிக்கு எச்சரிக்கையாய் இருங்கள். அது அவர்களுக்கு ஒரு தொழிலாக மாறிவிட்டது. அவர்கள் தேவனால் அழைக்கப்படவில்லை.

ஒரு தொழில் மற்றும் ஒரு அழைப்பு, இவற்றிற்கிடையே நிறைய வித்தியாசம் உள்ளது. ஒரு மருத்துவமனையில் ஒரு நோய்வாய்ப்பட்ட குழந்தை இருக்கிறது; ஒரு செவிலியர் தனது Shift Dutyல் 8 மணி நேரம் அதை கவனித்துக்கொள்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்த செவிலியர் பின்னர் வீட்டிற்குச சென்று அந்தக குழந்தையைப் பற்றி அனைத்தையும் மறந்துவிடுகிறார். அந்தக் குழந்தை மீதான அவளுடைய அக்கறை 8 மணி நேரம் மட்டுமே. இப்போது அவளுக்கு வேறு வேலைகள் உள்ளது, அதாவது திரைப்படங்களுக்கு செல்வது, தொலைக்காட்சி பார்ப்பது போன்றவை. மறுநாள் அவள் வேலைக்குச செல்லும் வரை அவள் அந்த குழந்தையைப பற்றி மீண்டும் சிந்திக்க வேண்டியதில்லை. ஆனால் அந்த குழந்தையின் தாய் 8 மணி நேர Shiftகளில் வேலை செய்வதில்லை. தன் குழந்தை உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது அவள் திரைப்படங்களுக்குச் செல்ல முடியாது. அதுதான் ஒரு தொழிலுக்கும் அழைப்புக்கும் உள்ள வித்தியாசம். இன்றைக்கு அநேக ஊழியர்கள் சபையை நிறுவி செவிலியராகவே இருக்கிறார்கள். தாயாக அழைப்பை பெற்றவர்களாக இருப்பது அரிதாகிப்போய்விட்ட காலத்தில் நாம் இருக்கிறோம்.

உங்களிடத்தில் பட்சமாய் நடந்துகொண்டோம்; பால் கொடுக்கிற தாயானவள் தன் பிள்ளைகளைக் காப்பாற்றுகிறதுபோல, நாங்கள் உங்கள்மேல் வாஞ்சையாயிருந்து, தேவனுடைய சுவிசேஷத்தை உங்களுக்குக் கொடுத்ததுமல்லாமல், நீங்கள் எங்களுக்குப் பிரியமானவர்களானபடியினாலே, எங்கள் ஜீவனையும் உங்களுக்குக் கொடுக்க மனதாயிருந்தோம் என்று பவுல் 1 தெச 2:7,8ல் கூறுகிறார். பவுல் அந்த ஜனங்களுக்கு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை மட்டுமல்ல, தனது வாழ்க்கையையும் போதித்தார். இந்த வழியில் செய்யப்படாத எந்த ஊழியமும் உண்மையில் கிறிஸ்தவ ஊழியம் அல்ல. பவுல் ஊழியத்திற்கான அழைப்பைப பெற்றதால் இயேசுவை அப்படி தீவிரமாக சேவித்தார். அவர் அதை ஒரு தொழிலாக எடுத்துக்கொள்ளவில்லை. கிறிஸ்துவுக்கு சேவை செய்வது அற்புதமானது. அது உலகிலேயே மிகப்பெரிய விஷயம். பூமியில் உள்ள எதையும் அதனுடன் ஒப்பிட முடியாது. ஆனால் நீங்கள் அழைக்கப்பட்டால் மட்டுமே.

கர்த்தருடைய வேலையை ஒரு தொழிலாக செய்தால், தேவன் விரும்பும் விதத்தில், கர்த்தருடைய வேலையை ஒருபோதும் செய்ய முடியாது. உலகில் உள்ள மற்ற எல்லா வேலைகளையும் ஒரு தொழிலாக செய்ய முடியும். ஆனால் கர்த்தருடைய ஊழியரின் வேலையை, தேவனுடைய அழைப்பால் மாத்திரமே செய்யமுடியும், செய்யவேண்டும். கொரிந்திய கிறிஸ்தவர்களிடம் பவுல் கூறினார், அவர்களிடம் 10,000 ஆசிரியர்கள் இருந்தாலும், அவர்களுக்கு இன்னும் ஒரு தகப்பன் மட்டுமே இருக்கிறார் (1 கொரி 4:15) என்பதாக. பவுல் தனது மந்தைக்கு ஒரு ஆவிக்குரிய தந்தையாகவும், தாயாகவும் இருந்தார். காரணம் பவுல் செய்தது அவருடையது ஒரு தொழில் அல்ல, அது இயேசுவிடம் பெற்றுக்கொண்ட அவருடைய அழைப்பு. நீங்களும் உங்கள் அழைப்பை முதலாவது அறிந்துகொள்ளுங்கள். பின்பு ஆண்டவருடைய அழைப்பில் நிலைத்திருங்கள். மற்றவர்கள் செய்கிறார்களென்று ஏதாவது செய்யாதிருங்கள். உங்களுக்கென்று கர்த்தர் கொடுத்த ஊழியத்தை நிறைவேற்ற, அந்த அழைப்பில் நிற்க, முழு பலத்துடன் செயல்படுங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org