என்னைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்(Seek me and live):-

ஆமோஸ் 5 : 4. கர்த்தர் இஸ்ரவேல் வம்சத்தாருக்குச் சொல்லுகிறது என்னவென்றால்: என்னைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/O97baOU5Uiw

வேதாகமத்தில் நாம் பிழைப்பதற்கு ஒருசில ரகசியங்களை கற்றுக்கொள்ளலாம். எசேக்கியேல் தீர்க்கதரிசி இப்படியாக சொல்கிறார் மனந்திரும்புங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்; சாகிறவனுடைய சாவை நான் விரும்புகிறதில்லை என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார் ( எசே 18 : 32 ) என்பதாக. இயேசு ஒருமுறை சொல்லும்போது இப்படியாக சொல்வார் இன்னும் கொஞ்சக்காலத்திலே உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள்; நான் பிழைக்கிறபடியினால் நீங்களும் பிழைப்பீர்கள் (யோவான் 14:19 ) என்பதாக. அப் பவுல் இப்படியாக சொன்னான் மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்; ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள் (ரோமர் 8:13 ) என்பதாக.

அதுபோல இந்த அதிகாரத்தில் ஆண்டவர் சொல்கிறார் அவரை நாம் தேடும்போது பிழைத்துக்கொள்வோம். பாப் இசை பாடகர் மைகேல் ஜாக்சன் தன்னுடைய வாழ் நாள் நீடித்திருப்பதற்கு தேவையான எல்லா மருத்தவ உபகரணங்களையும், மருத்துவர்களையும் தன்னோடு எப்பொழுதும் வைத்துக்கொண்டிருந்தான். ஆனால் நடந்தது எல்லா மருத்துவ உபகரணங்களும் அவனுடைய உயிரை காப்பாற்றமுடியவில்லை.

தானியேல் தீர்க்கதரிசி வாழ்ந்த காலத்தில் ராஜாவை மாத்திரம் தான் சேவிக்க வேண்டுமென்ற உத்திரவு பிறந்த வேளையிலும், அவன் தவறாமல் மூன்று வேளையும் கர்த்தருடைய சமூகத்தை தேடினான். நடந்தது என்ன ? அவனை சிங்க கெபிக்குள் போட்டாலும் சிங்கங்களின் வாயை கர்த்தர் கட்டிப்போட்டார். சிங்கங்களின் பசிக்கு தானியேல் இரையாகவில்லை; மாறாக கர்த்தர் தானியேல் பிழைக்கும்படி செய்தார். உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள் ( எரேமியா 29:13 ) என்றும் வசனம் சொல்கிறது.

ஒரு நபர் இப்படியாக சொன்னார் அவர் தன்னுடைய ஏழ்மை நிலையில், தான் வேலைபார்க்கும் இடத்தில் ஆராதனைக்கு செல்லும் நாளில் வேலை பார்த்தல் கூடுதல் சம்பளம் கிடைக்கும் என்று அதிகாரிகள் சொன்னார்கள். அதற்கு அந்த ஏழை நபர் சொன்னார் நீங்கள் எனக்கு எவ்வளவு பெரிய தொகையை செலுத்தினாலும் நான் கர்த்தருடைய சமூகத்துக்கு செல்லவேண்டும். அவரை தேடிச்செல்கிற அந்த சந்தோசத்திற்கு இணையாக நீங்கள் தரும் பெரிய பணத்தை ஒப்பிடமுடியாது என்று. அப்படிப்பட்ட ஜனங்கள் பிழைப்பார்கள். நீங்களும் ஒவ்வொருநாளும் உத்தம இருதயத்தோடு கர்த்தரை தேடுங்கள்; அவருடைய பிரசன்னத்தை வாஞ்சியுங்கள்; அவருடைய சத்தத்திற்காக காத்திருங்கள்; அதிகாலையில் எழுந்து அவரை தேடுங்கள்; சூழ்நிலைகள் உங்களுக்கு எதிராக இருந்தாலும், கர்த்தரை தேடுகிற நீங்கள் பிழைப்பீர்கள்.

மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது (சங்கீதம் 42:1 ) என்று சங்கீதக்காரன் சொல்வதுபோல, முழு உள்ளதோடு, மானை போல அவரை வாஞ்சித்து தேடுங்கள். கர்த்தர் உங்களை பிழைக்கும்படி செய்வார்.

கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *