சர்வவல்லமையுள்ளவர் ராஜ்யபாரம் பண்ணுகிறார் (Almighty God Reigns).

அப்பொழுது திரளான ஜனங்கள் இடும் ஆரவாரம்போலவும்,     பெருவெள்ள இரைச்சல்போலவும்,     பலத்த இடிமுழக்கம்போலவும்,     ஒரு சத்த முண்டாகி: அல்லேலூயா,     சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ராஜ்யபாரம் பண்ணுகிறார் (வெளி. 19:6).

For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/x8YlfAMMD_A

நாம் ஆராதிக்கிற தேவன் சர்வ ல்லமையுள்ளவர்,     எபிரேய பதத்தில் எல்-ஷடாய் என்ற நாமமுடையவர்.உங்கள் ஒவ்வொருவருக்கும் கர்த்தர் சர்வ வல்லமையுடையவராக வெளிப்பட்டு,     உங்கள் வாழ்க்கையில் காணப்படுகிற தடைகளையும்,     வியாதிகளையும் நீக்கி,     அற்புதங்களைச் செய்து உங்களை மகிழப்பண்ணுவார். எல்-ஷடாய் என்ற தேவனுடைய நாமத்திற்கு மூன்று அர்த்தங்கள் காணப்படுகிறது.   சர்வவல்லமையுள்ளவர் (All Powerful) என்றும்,     அனைத்திற்கும் போது மானவர் (All Sufficient) என்றும்,     ஷாட் (Shad) என்ற  எபிரேய பதத்திற்குத் தாயைப் போன்ற மார்புகளை உடையவர் என்றும் பொருள் காணப்படுகிறது. 

தேவன் முதல் முதலாக சர்வ வல்லமையுள்ளவர் என்ற நாமத்தில் ஆபிரகாமுக்குத் தன்னை அறிமுகப்படுத்தினார்.  ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதானபோது,     கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி,     நான் சர்வவல்லமையுள்ள தேவன்,     நீ எனக்கு முன்பாக நடந்து கொண்டு உத்தமனாயிரு (ஆதி. 17:1) என்றார். அவனுடைய வாழ்க்கையில் வல்லமையின் தேவனாக அவர் காணப்பட்டார்,     யாரும் அவனை மேற்கொள்ள முடியவில்லை.  அவ்வண்ணமாகக் காணப்படுவதற்கு,     ஆபிரகாம் கர்த்தருக்கு முன்பாக நடந்து,     உத்தமனாகக் காணப்படவேண்டும். கர்த்தருடைய பிள்ளைகள் ஒவ்வொருவரும் கர்த்தருக்கு முன்பாக உத்தமமான ஜீவியம் செய்கிறவர்களாகக் காணப்படும் போது,     கர்த்தர் உங்களுக்கு சர்வ வல்லமையின் தேவனாக வெளிப்படுவார். உங்கள் வாழ்க்கையில் காணப்படுகிற மலையைப் போன்ற எல்லா பிரச்சினைகளையும் நீக்கி உங்களுக்கு தன் வல்லமையை வெளிப்படுத்துவார். அவரால் எல்லாம் கூடும்,     அவர் சொல்ல எல்லாம் ஆகும்,     அவர் கட்டளையிட நிற்கும். மாமிசமான யாவருக்கும் அவர் கர்த்தர்,     அவரால் செய்ய முடியாத அதிசயமான காரியங்கள் ஒன்றுமில்லை.

நாம் ஆராதிக்கிற தேவன்,     அனைத்திற்கும் போது மானவர். உங்கள் அனைத்து தேவைகளையும் சந்திக்க அவர் போது மானவர்.  யெகோவாயீரே என்பது அவருடைய நாமம்,     எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளுகிற தேவன். ஆபிரகாமுக்கு வயோதிப நாட்களில் குமாரனைக் கொடுத்தார்,     மோரியா பர்வதத்தில் ஆட்டுக்கடாவைக் கொடுத்து,     அவன் குமாரனாகிய ஈசாக்கை மரணத்திலிருந்து விடுவித்தார்,     திரளான ஆஸ்தி ஐசுவரியங்களைக் கொடுத்து அவனை உயர்த்தி ஆசீர்வதித்தார். கர்த்தர் உங்கள் அனைத்திற்கும் போது மானவர்,     நன்மையான எல்லாக் காரியங்களும் அவரிடத்திலிருந்து வருகிறது. ஆபிரகாமைப் போல உங்களுக்கும் எல்லா நன்மைகளையும்,     ஆசீர்வாதங்களையும் தந்து கனப்படுத்தி ஆசீர்வதிப்பார்.

நம்முடைய தேவன் தாயுள்ளம் கொண்ட தகப்பன்,     தாயைப் போன்ற மார்புகளை உடையவர்,     நம்மை ஆற்றித் தேற்றுகிறவர். ஒருவனை அவன் தாய் தேற்றுவது போல தேற்றுவேன் என்று வாக்கு அளித்தவர். ஒரு நாள் கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனத்திலே உண்டாகி,     ஆபிராமே,     நீ பயப்படாதே,     நான் உனக்குக் கேடகமும்,     உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் என்றார். அவன் அவரை நோக்கி,     அடியேனுக்கு என்ன தருவீர்? நான் பிள்ளையில்லாமல் இருக்கிறேனே என்று சோர்வோடு கூறினான். அவர் அவனை வெளியே அழைத்து வந்த நீ வானத்தை அண்ணாந்து பார்,     நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால்,     அவைகளை எண்ணு என்று சொல்லி,     பின்பு அவனை நோக்கி,      உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும் என்று வாக்கு அளித்தார்.  அவ்வண்ணமாகவே அவனுடைய சந்ததியைப் பெருகப் பண்ணினார்,     இன்று நாம் ஆபிரகாமின் சந்ததியாகக் காணப்படுகிறோம். கர்த்தர் உங்களுக்குத் தாயைப் போல வெளிப்படுவார். என்னை யாரும் விசாரிக்கவில்லை,     ஆறுதல் படுத்தவில்லை,     உற்சாகப் படுத்தவில்லை என்ற சோர்ந்த நிலையில் காணப்படுகிறீர்களா? தாயுள்ளம் கொண்ட நல்ல தகப்பன் உங்களைத் தேற்றி,     ஆற்றுகிறார். அவர் மார்பில் சாய்ந்து இளைப்பாறுங்கள். 

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *