உங்கள் நிமித்தம் சிலுவையில் இயேசு தரித்திரரானார்.

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே, அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும்,    நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு,    உங்கள் நிமித்தம் தரித்திரரானாரே (2 கொரி. 8:9).

For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/ECB6Sh7ubBM

இயேசு கிறிஸ்துவின் கிருபை,    கல்வாரிச் சிலுவையில் நமக்காக ஜீவன் கொடுக்கும் படிக்குச் செய்தது. அவர் மகா ஐசுவரியமுள்ளவர். நாம் காண்கிறவை எல்லாம் அவர் மூலமாகவும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது. அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும் நம் நிமித்தம் தரித்திரரானார். பிறக்கும் போது சத்திரத்தில் இடமில்லை,    ஊழியத்தின் பாதையில் நரிகளுக்குக் குழிகளும்,    ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூட கூடுகளும் காணப்பட்டது,    ஆனால் மனுஷகுமாரனுக்குத் தலை சாய்க்க இடமில்லை. சிலுவையில் எலும்புகளையெல்லாம் எண்ணத் தக்கவராய்,    வஸ்திரங்கள் உரியப்பட்டவராய்,    ஒரு புழுவைப் போலக் காணப்பட்டார். மரித்த வேளையில் அடக்கம் செய்த கல்லறை  கூட,     அரிமத்தி  ஊரானாகிய யோசேப்பின் இரவல் கல்லறையாகக் காணப்பட்டது. ஐசுவரிய சம்பன்னராகிய அவர் ஏன் இவ்வளவாகத் தரித்திரம் அடைய வேண்டும்?. அவருடைய தரித்திரத்தினால் அவரைப் பின்பற்றுகிற நாம் ஐசுவரிய வான்களாக வேண்டும் என்பதற்காக. ஆகையால் தான் கிறிஸ்து   பிரசங்கிக்கப்படுகிற இடங்களில்,    அவரை சொந்த இரட்சகராக ஜனங்கள் ஏற்றுக் கொள்ளும் போது,    அவர்களுடைய தரித்திரங்கள் விலகும். சுவிசேஷத்தின் வெளிச்சம் ஜனங்களின் தரித்திரத்தை மாற்றும். 

ஏதேன் தோட்டத்தில் மனிதனுக்குத் தேவையான எல்லாவற்றையும் சிருஷ்டித்த பின்புதான் ஆதி பெற்றோராகிய ஆதாமையும் ஏவாளையும் தேவன் சிருஷ்டித்தார். அவர்களுக்கு வேண்டியதெல்லாம்  அங்குக் காணப்பட்டது.  ஆனால் அவர்கள் கீழ்படியாமையின் நிமித்தம் சாபம் கடந்துவந்தது. பூமி முள்ளையும் குருக்கையும் முளைபித்தது,    வியர்வை சிந்தி கடினமாக உழைக்கவேண்டியதாயிற்று.  அதினிமித்தம் தரித்திரம்,    பற்றாக்குறை,    கடன்கள் என்ற சாபங்கள் எல்லாம் மனுகுலத்தைப் பிடித்தது. ஆனால் இயேசு சிலுவையில் நமக்காகத் தரித்திரராகத் தொங்கினதினால் அவருடைய தரித்திரம் நம்மை ஐசுவரிய வான்களாக மாற்றியிருக்கிறது. நம்பிக்கையோடு சிலுவையண்டை வரும் போது,    அவருடைய இரத்தத்தினால் பாவங்களறக் கழுவப்பட்டு,    பாவ மன்னிப்பின் நிச்சயத்தை நீங்கள் பெறும் போது,    கர்த்தர் உங்கள் தரித்திரங்களை மாற்றுவார்,    உங்கள் குறைவுகளை நிறைவாக்குவார். நீங்கள் எல்லா நன்மைகளையும் பெற்று வாழ்ந்து செழித்திருக்கும் படிக்குச் செய்வார்.

அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்து சபை விசுவாசிகளுக்கு எழுதும் போது,    நாங்கள் தரித்திரர்  என்னப்பட்டாலும்  அனேகரை  ஐசுவரியவான்களாகக்குகிறவர்களாகக்  காணப்படுகிறோம் என்றார் (2 கொரி.6:10).  உண்மையாகக்  கர்த்தருடைய  வார்த்தைகளைப்  பிரசங்கிக்கிற பாத்திரங்கள் அனேகருடை வாழ்க்கையில் நன்மைகளைக் கொண்டுவருகிறவர்களாகக்  காணப்படுவார்கள். ஆபிரகாமின் ஆசீர்வாதங்களை இயேசு  கிறிஸ்துவின்  மூலமாக ஜனங்களுக்குக்  கடத்திச் செல்லுகிற ஆசீர்வாதத்தின் வாய்க்கால்களாகக் காணப்படுவார்கள். கர்த்தருடைய பிள்ளைகள் ஆண்டவருடைய சமூகத்திற்கு வந்து கர்த்தருடைய வார்த்தைகளைக் கற்றுக் கொள்ளும் போது,    ஆலயத்தின் நன்மைகளினால் அவர் உங்களை ஆசீர்வதிப்பார். உங்கள் வாழ்க்கையில்  யேகோவாயீரேவாக வெளிப்பட்டு,    உங்கள் தேவைகளைச் சந்திப்பார். உங்களை எல்லா விதங்களிலும் வாழ்ந்து செழித்திருக்கும் படிக்குச் செய்வார். சிலுவையில் அவர் அடைந்த தரித்திரத்தின் மூலம் நீங்கள் ஒவ்வொருவரும் ஐசுவரிய வான்களாவீர்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *