கொலோசெயர் 2:14,15. நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து; துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/VY90jVawxGs
ஒரு தேவமனிதனுக்கு ஆண்டவர் ஒருமுறை இயேசுவின் கொல்கதா பாடுகளை குறித்து தரிசனத்தில் காண்பித்தார். இயேசு கொல்கதா மலையில் வியாகுலத்தோடு ஜெபித்துக்கொண்டிருந்தார். இயேசு சிலுவையில் மரிக்கும் தருணம் நெருங்கி கொண்டிருந்தது. அப்பொழுது இயேசு இப்படியாக ஜெபித்தார்: பிதாவே, இந்த பாத்திரம் என்னை விட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும் என்று ஜெபித்தார். இதை குறிப்பிட்ட தூரத்திலிருந்து சாத்தான் கவனமாக பார்த்துக்கொண்டே இருந்தான். இயேசு சிலுவைக்கு நேராக போகக்கூடாது, இயேசு சிலுவை மரணத்தை நிராகரிக்க வேண்டும் என்று மிகவும் கலக்கத்தோடு பார்த்துக்கொண்டே இருந்தான். காரணம் பிசாசுக்கு நன்றாக தெரியும், இயேசு சிலுவை மரணத்தை ஏற்றுக்கொண்டால், முழு உலகமும் இயேசுவின் கட்டுப்பாட்டிற்குள் வந்து விடும், மரணத்திற்கும் பாதாளத்திற்கு உள்ள திறவுகோலை இயேசு கையில் எடுத்துவிடுவார் என்று நன்றாக தெறியும். அதே வேளையில் இயேசு பிதாவிடம், நான் சிலுவை மரணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்று சொன்னால், பிதாவானவர் இயேசுவின் எல்லா வேண்டுதலையும் கேட்பார் அதை ஒப்புக்கொள்ளுவார் என்றும் பிசாசுக்கு நன்றாக தெரியும். இப்படியாக பிசாசு மிகவும் எதிர்பார்ப்போடு பார்த்துக்கொண்டிருக்கையில், இயேசு முடிவில், ஆயினும் என்னுடைய சித்தத்தின்படி அல்ல உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று பிதாவின் சித்தத்திற்கு தன்னை பூரணமாக ஒப்புக்கொடுத்தார். எப்பொழுது இயேசு இந்த வார்த்தைகளை சொல்லி தன் ஜெபத்தை முடித்தாரோ, அப்பொழுது அதை பார்த்துக்கொண்டிருந்த பிசாசு அலறினான், ஐயோ நான் தோற்றுப்போய்விட்டேன், நான் தோற்றுப்போய்விட்டேன் என்று தன்னுடைய மார்பில் அடித்துக்கொண்டது நடுநடுங்கினான். அவனுக்குள்ளாக இதுவரைக்கும் இருந்திராத நடுக்கம் அவனை பிடித்தது. ஆம், இயேசு சிலுவையில் வெற்றி சிறந்தார். சாத்தானின் சகல வல்லமைகளை உரித்து அவனை வெளியரங்கமான கோலமாக்கினார்.
இன்றும் பிசாசு இயேசுவுக்கு முன்பாக நடுநடுங்க காரணம் இயேசு சிலுவையில் வெற்றி சிறந்தார். எல்லாம் முடிந்தது என்று சொல்லி தன் ஜீவனை இயேசு விட்டார். இந்த உலகத்தில் அவர் செய்ய இருந்த இல்ல காரியத்தையும் நேர்த்தியாக செய்து, சிலுவையில் நம் எல்லாரையும் சேர்த்துக்கொண்டார். நம்மை மீட்டு கொண்டார். இப்பொழுது உங்களுக்கு எதிராக இருந்த கையெழுத்துகள் ஏற்கெனவே குழைக்கப்பட்டாயிற்று.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org