எபே 1:20 எல்லாத் துரைத்தனத்துக்கும், அதிகாரத்துக்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்துக்கும், இம்மையில்மாத்திரமல்ல மறுமையிலும் பேர்பெற்றிருக்கும் எல்லா நாமத்துக்கும் மேலாய் அவர் உயர்ந்திருக்கத்தக்கதாக, …
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/2CStDvNaS9Q
அப்போஸ்தலனாகிய பவுல் எபேசு சபைக்கு எழுதும்போது சொல்லுகிறான் இயேசுவின் நாமம் உயர்ந்த நாமம் என்பதாக. இதற்கு முந்தைய வசனங்களில் பவுல் இரட்சிக்கப்பட்ட, அபிஷேகம் பண்ணப்பட்ட எபேசு சபை ஜனங்களுக்கு இயேசுவை அறிகிற ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை அவர்களுக்கு தந்தருளவேண்டுமென்றும், அவர்களுக்கு பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்றும் வேண்டிக்கொள்ளுகிறான். இப்படித்தான் இயேசுவின் நாமம் உயர்ந்த நாமம் என்பதை அறியாமல் இருக்கும்படி பிசாசானவன் அநேகருடைய மனக்கண்களை குருடாக்கி வைத்திருக்கிறான். மனிதனுடைய தலையில் இரண்டு கண்கள் காணப்படுகிறது. இது தவிர ஆவிக்குரிய மனக்கண்களும் காணப்படுகிறது. அந்த ஆவிக்குரிய கண்கள் திறக்கப்பட்டால் தான் இயேசுவின் நாமம் உயர்ந்த நாமம் என்பதை அறிந்துகொள்ள முடியும்.
இயேசுவின் நாமம் எல்லாத் துரைத்தனத்துக்கும், அதிகாரத்துக்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்துக்கும் மேலான நாமம். கர்த்தத்துவம் என்றால் Goverment அதாவது அரசாங்கமாக காணப்படுகிறது. சத்துரு இந்த முழு உலகத்தையும் தன் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவர இந்த அரசாங்கங்களை பயன்படுத்தி அவர்கள் அனைவரையும் ஒரு Network போல, வலைப்பின்னல் போல இணைத்து செயல்படுகிறவனாக காணப்படுகிறான். இப்படியாக சத்துரு செயல்பட்டாலும் நம் கர்த்தர் இராஜாக்களை தள்ளி இராஜாக்களை ஏற்படுத்துகிறவர். கர்த்தர் ராஜரீகம்பண்ணுகிறார் என்று வேத வசனம் சொல்லுகிறது. இயேசு எல்லா அரசாங்கங்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் தான் அவருடைய நாமம் உயர்ந்த நாமம் என்று அழைக்கப்படுகிறது. நிம்ரோத், தம்மூஸ் துவங்கி இப்பொழுது இருக்கும் எல்லா அரசாங்கங்களையும் இயேசு தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். அவருக்கு மறைவாக ஒன்றும் நடப்பதில்லை எனபதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.
ஒரு அரசாங்கம் அல்லது ஆளுகிற கட்சி என்றால் அந்த கட்சிக்கு தலைவர், பொதுச்செயலாளர், செயலாளர், மாவட்ட நிர்வாகிகள், ஊரக செயலாளர்கள், தொகுதி செயலாளர்கள், பகுதி செயலாளர்கள் என்று அநேகர் இருப்பார்கள். இவர்கள் அனைவரும் Network போல செயல்பட்டு தங்கள் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள, ஆட்சியை பிடிக்க முயற்சிப்பார்கள். எவ்வளவு பெரிய Network போல இவர்கள் செயல்பட்டாலும் அவர்களுக்கு மேலாக இயேசு என்னும் உயர்ந்த நாமத்தை உடையவர் இருக்கிறார் என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும். இப்படிப்பட்ட உயர்ந்த நாமத்தையுடைய இயேசுவை துதித்து பாடி அவரை போற்றுங்கள். அப்பொழுது உங்களுக்கு எதிராக இருக்கிற எல்லா கர்த்தத்துவங்களும் உங்களுக்கு முன்பாக அடங்கும்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org