கர்த்தருடைய சேனையின் அதிபதி (The commander of the Lord’s Army).

அதற்கு அவர்: அல்ல,     நான் கர்த்தருடைய சேனையின் அதிபதியாய் இப்பொழுது வந்தேன் என்றார்,     அப்பொழுது யோசுவா  தரையிலே  முகங்குப்புற விழுந்து பணிந்துகொண்டு,     அவரை நோக்கி: என் ஆண்டவர் தமது அடியேனுக்குச் சொல்லுகிறது என்னவென்று கேட்டான்(யோசுவா 5:14).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/1YCS7KRlFHQ

இயேசு,     நம்முடைய சேனாதிபதியாய் காணப்படுகிறார். நம்முடைய யுத்தங்களை நமக்காக அவர் செய்கிறார். அவர் யுத்தத்தில் வல்ல தேவன். உங்களுடைய யுத்தம் என்னுடையது,     நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்று நமக்கு வாக்கு கொடுத்திருக்கிறார். சத்துருவின் சேனைகள்,     அவனால் ஏவப்பட்ட  மனுஷர்களுடைய  போராட்டங்கள்,     நெருக்கங்கள் எல்லாவற்றிலும்  நமக்குத்  துணைநின்று  ஜெயத்தைத்  தருகிறவர். யோசுவாவும்,     இஸ்ரவேல் ஜனங்களும் யோர்தானை கடந்து இக்கரைப்பட்டு கானானுக்குள் பிரவேசித்தார்கள். கானானில் முப்த்தியொரு ராஜாக்களும்,     ஏழு ஜாதிகளும் உண்டு. அவர்கள் எல்லாரையும் யுத்தத்தில் மேற்கொண்டு,     கானான் தேசத்தை இஸ்ரவேல் ஜனங்களுக்காகப் பங்கிடுகிற ஒரு பெரிய பொறுப்பு யோசுவாவிற்குக் காணப்பட்டது. ஆகையால் அவன் கலங்கி நின்றான். அந்த வேளையில் இயேசு சேனையின் அதிபதியாக அங்கு வெளிப்பட்டார். உருவின பட்டயம் அவருடைய  கையிலிருந்தது.  யோசுவா அவரிடத்தில் போய்: நீர் எங்களைச் சேர்ந்தவரோ,     எங்கள் சத்துருக்களைச் சேர்ந்தவரோ என்று கேட்டான். அப்பொழுது அவர்,     நான் கர்த்தருடைய சேனையின் அதிபதியாய் உனக்கு உதவி செய்யும்படிக்கு இப்பொழுது வந்தேன்,     அப்பொழுது  யோசுவா தரையிலே  முகங்குப்புற விழுந்து பணிந்துகொண்டு,     அவரை நோக்கி: என் ஆண்டவர் தமது அடியேனுக்குச் சொல்லுகிறது என்னவென்று கேட்டான். உன் கால்களிலிருக்கிற பாதரட்சைகளைக் கழற்றிப்போடு,     நீ நிற்கிற இடம் பரிசுத்தமானது என்றார்,     யோசுவா அப்படியே செய்தான். 

கர்த்தருடைய பிள்ளைகளே,     இயேசுவை நோக்கி,     நீர் எனக்குச் சொல்லுகிறது என்ன என்று இன்று நீங்கள் கேட்பீர்கள் என்றால் நான் பரிசுத்தர்,     உங்களைப் பரிசுத்தப்படுத்திக் கொண்டு  என்னைப்  பணிந்துகொள்ளுங்கள் என்று ஆண்டவர் கூறுவார். இயேசுவின் பரிசுத்தத்தைக் குறித்த ஒரு பயபக்தி உங்களுக்குள் எப்பொழுதும் காணட்டும். நீங்களும் பரிசுத்தமாய் வாழ ஒவ்வொரு நாளும் பிரயாசப்படுங்கள். அப்பொழுது கர்த்தர் உங்களுக்கு உதவி செய்யும்படிக்கு உங்கள் வாழ்க்கையில் சேனாதிபதியாக வெளிப்படுவார். உங்கள் யுத்தங்களை அவர் பார்த்துக் கொள்ளுவார். உங்கள் சத்துருக்களுக்கு இயேசுவே சத்துருவாய் மாறுவார்.  கிதியோனின் நாட்களில் கர்த்தருடைய பட்டயம் கிதியோனின் பட்டயமாய் மாறினதினால்,     ஒரே மனுஷனாய் அவன் மீதியானியர்களை முறியடித்தான்.  அதுபோல இயேசு உங்கள் சேனாதிபதியாய் உங்களுக்குள் வாசம் செய்யும் போது,     நீங்கள் உங்கள் சத்துருக்களை மிதிப்பீர்கள். உங்கள்  சத்துருக்கள் உங்கள் பாதங்களின் கீழ் சாம்பலாய் இருப்பார்கள். கர்த்தர் உங்களை வெற்றிச் சிறக்கச் செய்வார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *