புறஜாதிகளின் மார்க்கத்தைக் கற்றுக் கொள்ளாதிருங்கள் (Learn not the ways of heathen).

புறஜாதிகளுடைய மார்க்கத்தைக் கற்றுக்கொள்ளாதிருங்கள்,    வானத்தின் அடையாளங்களாலே புறஜாதிகள் கலங்குகிறார்களே என்று சொல்லி,    நீங்கள் அவைகளாலே கலங்காதிருங்கள்(எரேமியா 10:2).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/XObDF0kwBAk

பூமியில் பல மார்க்கங்களும்,    வழிகளும் காணப்படுகிறது. இவற்றில்  அனேகம் மனிதர்களால் உருவாக்கப்பட்டது. ஒவ்வொருவரும் எங்கள் மார்க்கமே உயர்ந்தது என்று கூறுகிறார்கள். உலகத்தில் பலவழிகள் காணப்பட்டாலும் இயேசு கூறினார் நானே வழி என்பதாக. அவர் ஒருவரே இரட்சிப்பின் வழி,    அவர் ஒருவரே பரிசுத்தத்தின் வழி,    அவர் ஒருவரே மாதிரி ஜீவியத்தின் வழி,    அவர் ஒருவரே நித்தியத்தின் வழியாய் காணப்படுகிறார்.  புறஜாதிகளுடைய மார்க்கத்தைக் கற்றுக்கொள்ளாதிருங்கள் என்று அவர் நமக்குக்  கட்டளையிட்டிருக்கிறார். 

இஸ்ரவேல் சபை கானானுக்குள் பிரவேசிப்பதற்கு முன்பு,    நான் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடுகிற ஜனத்தினுடைய வழிபாடுகளில் நடவாதிருங்கள்,    அவர்கள் இப்படிப்பட்ட காரியங்களையெல்லாம் செய்தபடியால் நான் அவர்களை வெறுத்தேன் (லேவி. 20:23) என்று ஆண்டவர் கூறினார்.  ஆகப் புறஜாதிகளின் மார்க்கங்களின் படி நடக்கிறவர்களைக் கர்த்தர் வெறுக்கிறார்.  காயீனுடைய வழி,    பிலேயாமின் வழி,    மார்க்கம் தப்பி நடக்கிற நட்சத்திரங்களாகிய ஊழியர்களுடைய தவறான வழி  என்று வேதத்திலும் அனேகருடைய வழிகளைக் குறித்து எழுதப்பட்டிருக்கிறது. அவைகள் ஜனங்களை அழிவுக்கு நேராகக் கொண்டு செல்லும். உங்களுக்குள்ளே ஒரு தீர்க்கதரிசியாகிலும்,    சொப்பனக்காரனாகிலும் எழும்பி:  நீங்கள் அறியாத வேறே  தேவர்களைப் பின்பற்றி,    அவர்களைச் சேவிப்போம் வாருங்கள் என்று சொல்லி,    உங்களுக்கு ஒரு அடையாளத்தையும் அற்புதத்தையும் காண்பிப்பேன் என்று குறிப்பாய்ச் சொன்னாலும்,    அவன் சொன்ன அடையாளமும் அற்புதமும் நடந்தாலும்,     அந்தத் தீர்க்கதரிசியாகிலும்,    அந்தச் சொப்பனக்காரனாகிலும்  சொல்லுகிறவைகளைக் கேளாதிருப்பீர்களாக,    உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும்  அன்புகூருகிறீர்களோ  இல்லையோ என்று அறியும் படிக்கு உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சோதிக்கிறார். சில வேளைகளில் தங்களை தீர்க்கதாசிகள்  என்று கூறிக் கொண்டு நடப்பவர்களை அனுப்பி,    அவர்கள் காட்டுகிற வழிகளில் நாம் நடக்கிறோமா என்று கர்த்தர் நம்மை சோதிக்கிறார்,    ஆகையால் ஜாக்கிரதையாயிருங்கள்.

கர்த்தருடைய பிள்ளைகளே,    சத்துரு அனேக விசாலமான வாசல்களையும்,    வழிகளையும் காட்டி உங்களை வஞ்சிப்பதற்கு நயங்காட்டலாம். அவனுடைய தந்திரங்கள் நீங்கள் அறியாதவைகள் அல்ல. நீங்கள் அவனுக்கு எதிர்த்து நிற்கும் போது அவன் உங்களை விட்டு ஓடிப்போவான். நீங்கள் உலகத்தின வழிகளைக் கற்றுக்கொள்ளாமல்,    நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்,    என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு,    என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்,    என்று கூறின ஆண்டவரைக் கற்றுக்கொள்ளுங்கள். அவருடைய பாதச்சுவடுகளை அனுதினமும் பின்பற்றுங்கள். அப்பொழுது,    உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *