உங்களுக்கு பயப்படுகிற பயம் (Fear of you)

எஸ் 8:17. ராஜாவின் வார்த்தையும் அவனுடைய கட்டளையும் போய்ச்சேர்ந்த எல்லா நாடுகளிலும், எல்லாப் பட்டணங்களிலும், யூதருக்குள்ளே அது மகிழ்ச்சியும், களிப்பும், விருந்துண்டு கொண்டாடும் நல்ல நாளுமாயிருந்தது; யூதருக்குப் பயப்படுகிறபயம் தேசத்து ஜனங்களைப் பிடித்ததினால், அவர்களில் அநேகர் யூதமார்க்கத்தில் அமைந்தார்கள்.

For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/P6WNWsMkuZ0

நாம் கர்த்தருக்கு பயந்து ஜீவிக்கும்போது, நம்மைக்குறித்து மற்றவர்கள் பயந்திருக்கும்படியாக கர்த்தர் செய்வார். ஜான் நாக்ஸ் என்ற தேவ மனிதர் மூலம் ஆவியானவர் பலத்த எழுப்புதலை ஸ்காட்லாந்து தேசத்தில் உண்டு பண்ணினார். அவர் ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு மணிநேரமாவது தன்னுடைய தேசத்திற்க்காக ஜெபிப்பார். ஆண்டவரே ஸ்காட்லாந்தை எனக்கு தாரும், இல்லையென்றால் நான் சாகிறேன் என்று பாரத்தோடு ஜெபித்த ஜெப வீரன் தான் ஜான் நாக்ஸ். அவருடைய நாட்களில் ஸ்காட்லாந்து தேசத்தின் ராணியாக இருந்தவர் மேரி என்றழைக்கப்படுபவர். ஒரு நாள் அந்த இராணி சொன்னார், ஐரோப்பாவில் கூடியிருந்த அனைத்துப் படைகளையும் விட ஜான் நாக்ஸின் ஜெபத்திற்கு நான் அதிகம் பயப்படுகிறேன் என்பதாக. ஒரு தேசத்தின் இராணியே ஜான் நாக்ஸ் என்ற தேவமனிதனுக்கு பயந்தார்கள்.

அகாஸ்வேரு அரசாண்ட காலத்தில், தேவனுக்கு பயந்திருந்த மனிதனும், தன் ஜனம் அளிக்கப்பட கூடாது என்ற பாரம் நிறைந்த மனுஷன் தான் மொர்தெகாய். அவனின் பாரமும், எஸ்தரின் முயற்சியும், யூதர்களின் உபாசமும், அகாஸ்வேரு இராஜா தன் செங்கோலை நீட்டி தயவை கட்டளையிடும்படி செய்தது. மாத்திரமல்ல, 127 நாடுகளை சேர்ந்தவர்களும் யூதர்களுக்கு பயந்திருந்தார்கள். யூதர் அகாஸ்வேரு ராஜாவின் சகல நாடுகளிலுமுள்ள பட்டணங்களிலே தங்களுக்குப் பொல்லாப்பு வரப்பண்ணப்பார்த்தவர்கள்மேல் கைபோடக் கூடிக்கொண்டார்கள்; ஒருவரும் அவர்களுக்கு முன்பாக நிற்கக்கூடாதிருந்தது; அவர்களைப்பற்றி சகல ஜனங்களுக்கும் பயமுண்டாயிற்று. நாடுகளின் சகல அதிகாரிகளும், தேசாதிபதிகளும், துரைகளும், ராஜாவின் காரியங்களை நடப்பிக்கிறவர்களும், யூதருக்குத் துணைநின்றார்கள்; மொர்தெகாயினால் உண்டான பயங்கரம் அவர்களைப் பிடித்தது.

அதுபோல கர்த்தருக்காகவும், ஜனங்களுக்காகவும் பாரப்படுகிறவர்களுக்கு விரோதமாக எழும்புகிறவர்கள் யாராக இருந்தாலும், கர்த்தருடைய ஜனங்களைக்குறித்ததான பயத்தை எதிரிகளின் உள்ளத்தில் வரும்படி கர்த்தர் செய்வார். உங்கள் வேலைஸ்தலத்திலும், ஊழியங்களிலும் உங்களை பார்த்து பொறாமைப்படுகிற ஜனங்களை காட்டிலும், உங்களை பார்த்து பயப்படுகிற பயத்தை கர்த்தர் உண்டுபண்னுவார். ஜான் நாக்ஸ் என்ற தேவ மனிதரை போல ஜெபத்தில் உறுதியாய் தரித்திருங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *