பிலேயாமின் ஆலோசனை (Counsel of Balaam).

பேயோரின் சங்கதியிலே பிலேயாமின் ஆலோசனையினால் இஸ்ரவேல்  புத்திரர் கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணக்  காரணமாயிருந்தவர்கள் இவர்கள்தானே, அதினால் கர்த்தரின் சபையிலே வாதையும் நேரிட்டதே (எண். 31:16).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/xUfVememV5E

இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்தரத்தில் காணப்பட்ட வேளையில் அவர்களை சபிக்கும் படிக்குப் பாலாக் கூலிகொடுத்து பிலேயாம் என்ற கர்த்தருடைய தீர்க்கதரிசியை அழைத்தான்.  பாலாக் கர்த்தருடைய எதிரி என்பதை பிலேயாம் அறிந்திருந்தும், கர்த்தர் கொடுத்த வரத்தை, காசுக்காக விற்றுப் போட அவன் விரும்பினான். அவன் வந்து மூன்று முறை  அவர்களைச் சபிக்க முற்பட்டும் ஆண்டவர் அவன் வாயில் ஆசீர்வாதத்தின் வார்த்தைகளைப் போட்டார். கடைசியில்  இஸ்ரவேல் ஜனங்களை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்கு பிரியம் என்பதை பிலோயம் கண்டு, தன்னுடைய பேராசை நிறைவேறாமல் போனதைக் நினைத்து,  பாலாக்குக்கு  துர்ஆலோசனையைக் கொடுத்து, அழகிய மோவாயிய ஸ்திரீகளைப்  பாளயத்திற்குள்  அனுப்பும் படிக்குக் கூறினான். அவனுடைய வார்த்தையின்படி  பாலாக் மோவாபிய ஸ்திரீகளை பாளையத்திற்குள் அனுப்பி  இஸ்ரவேல் ஜனங்களை வேசித்தனமும், விக்கிரக ஆராதனையும்  செய்யும்படிக்குச் செய்து, பாவத்தில் விளத் தள்ளினான்.  அதினிமித்தம்  கர்த்தருடைய கோபாக்கினை இஸ்ரவேல் சபையின் மேல் வந்தது, அதனால் உண்டான வாதையின் நிமித்தம் சுமார் இருபத்தி நாலாயிரம் பேர் மரித்துப் போனார்கள்.  இஸ்ரவேல் ஜனங்கள் பல ராஜாக்களை வீழ்த்தினார்கள். ஆனால் மோவாபிய ஸ்திரீகள் என்ற தோரணையில் பிசாசின் சோதனை வந்த போது எளிதாகத் தோற்றுப் போனார்கள். 

இயேசு பெர்கமு சபைக்குச் செய்தியை அனுப்பும் போது, சில காரியங்களைக்குறித்து உன்பேரில் எனக்குக் குறை உண்டு, விக்கிரகங்களுக்குப் படைத்தவற்றைப் புசிப்பதற்கும் வேசித்தனம் பண்ணுவதற்கும் ஏதுவான இடறலை இஸ்ரவேல் புத்திரர் முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனை செய்த  பிலேயாமுடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்கள்  உன்னிடத்திலுண்டு என்று வெளி. 2:14ல் கூறினார். கர்த்தருடைய பிள்ளைகளை வீழ்த்துவதற்குச் சத்துரு பிலேயாம் போன்றவர்கள் மூலம் போதனைகளையும் ஆலோசனைகளையும் கொடுத்து சபைகளில் கலக்கங்களை ஏற்படுத்துகிறவனாய் இந்நாட்களிலும் காணப்படுகிறான். இப்படிப்பட்டவர்களுடைய வார்த்தைகள், கர்த்தருடைய செம்மையான வழியை விட்டு நம்மைத் தப்பி நடக்கும் படிக்குச் செய்யும் என்று 2 பேதுரு 2:15 கூறுகிறது. ஆகையால், பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாய்ப் போராடவேண்டும்,  ஏனெனில் நமது தேவனுடைய கிருபையைக் காமவிகாரத்துக்கேதுவாகப் புரட்டி, ஒன்றான ஆண்டவராகிய தேவனையும், நம்முடைய கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவையும் மறுதலிக்கிற பக்தியற்றவர்களாகிய  சிலர் பக்கவழியாய் நுழைந்திருக்கிறார்கள் என்று யுதா 3,4ல் கர்த்தர் எச்சரித்தார். சத்துரு நம் வாழ்க்கையில் கொண்டு வருகிற  பெரிய யுத்தங்களை  ஜெயித்து விடுவோம், ஆனால் சின்ன சின்னக் காரியங்களில் தோற்றுவிடுவோம். ஆகையால் எல்லா ஆலோசனைகளையும் வேத வசனங்களோடு ஒப்பிட்டுப் பார்த்து, வசனம் காட்டும் வெளிச்சத்தில் நடக்க உங்களை அர்ப்பணியுங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *