பிள்ளைகளைப்போல் (Become like Little Children)

நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். – Matt 18:3

இந்தப்பிள்ளையைப்போலத் தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ, அவனே பரலோகராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான்  – Matt 18:4

ஒரு புறம் வேதம் நம்மை குழந்தைகளாய் இராமல் வளருங்கள் ( Ephes. 4:14,Heb 5:12) என்று சொல்கிறது.

மறுபுறம் சில காரியங்களில் குழந்தைகளை போல் இருங்கள் என்றும் சொல்கிறது (Matt 18:4, 1 Cori 14:20,1 Pet 2:3)

நாம் தேவனுடைய ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க வேண்டுமானால்,குழந்தைகளிடத்தில் காணப்படும் சில சுபாவங்கள் நம்மிடம் காணப்பட வேண்டும்

1.  அன்பு (Love)

ஒரு தாய் தன் குழந்தையுடன் பூங்காவிற்கு சென்றாள். அந்த குழந்தைக்கு பூங்கா மிகவும் பிடித்து விட்டது, மகிழ்ச்சியுடன் விளையாடி கொண்டிருக்கும் போது ,தாய் ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டாள். குழந்தை, தாயை தேடி அழ ஆரம்பித்தது.ஒரு காவலாளி குழந்தையிடம் அநேக விளையாட்டு பொருட்களை கொடுத்து அதன் கவனத்தை திருப்ப முயன்றார். ஆனால் அந்த குழந்தையோ ஒன்றையும் பொருட்படுத்தாமல் ‘என் அம்மா தான் வேண்டும்’ என்று கதறியது. அதைக் கேட்ட தாய், சந்தோஷத்தோடு அந்த குழந்தையை அணைத்து கொண்டாள்.

நாம் தேவனை அதிகம் விரும்புகிறோமா ?அல்லது அவரிடத்தில் இருந்து வரும் ஆசிர்வாதங்களை அதிகம் விரும்புகிறோமா ?

2.  விசுவாசம் (Faith)

ஒரு தகப்பன் குழந்தையை மேலே தூக்கி போட்டு பிடித்துக்கொண்டிருந்தார். அந்த குழந்தையோ மேலே செல்லும் போதும் பயப்படாமல் சிரித்துக் கொண்டிருந்தது,காரணம் எவ்வளவு உயரத்தில் போனாலும் கிழே விழாமல் என் தகப்பன் பிடித்து விடுவார் என்பது அந்த குழந்தைக்கு தெரியும்.

நாம் எல்லா சூழ்நிலைகளிலும் தேவனை விசுவாசிக்கிறோமா?

3.  தாழ்மை (Humility)

தாழ்மை  என்பது  நாம் நம்மை குறித்து அதிகம் எண்ணாதது (Humility is not thinking less of ourselves but ourselves less). ஒரு சமயம்  5 ஆயிரத்திற்கும் அதிகமான ஜனங்கள் பசியோடு காணப்பட்ட போது , ஒரு சிறுவன் மட்டும் தன்னை குறித்து சிந்திக்காமல் தன்னிடம் இருந்த அனைத்தையும் ( 5 அப்பம், 2 மீன்) இயேசு கிறிஸ்துவிடம் அற்பணித்தான். ஆண்டவர் அந்த சிறுவனை கொண்டே ஆயிரங்களை போஷித்தார்.

நாம் மற்றவர்களின் பிரயோஜனத்தை தேடுகிறோமா ? (1 Cori 10:24)

 அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக (Phil 2:4)

நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களனைவரோடுங்கூட இருப்பதாக.

Thivakar .B
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Pillaigal Kartharal Varum Suthanthiram, Uthamiyae Vol. 6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *