வெளி 19 : 6. அப்பொழுது திரளான ஜனங்கள் இடும் ஆரவாரம்போலவும், பெருவெள்ள இரைச்சல்போலவும், பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தமுண்டாகி: அல்லேலூயா, சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ராஜ்யபாரம்பண்ணுகிறார்.
அநேக வேளைகளில் நாம் ஜெபிக்கும்போது நம்முடைய கண்களுக்கு முன்பாக இயேசுகிருஸ்துவை ஒரு சாதாரண மனிதராக நிறுத்திவிடுகிறோம். ஏதோ ஒரு சில படங்களில் இயேசுவை போல நடித்தவர்களை பார்த்தோ அல்லது வரைபடத்தை பார்த்தோ அவரை சாதாரணமாக பார்க்கிறவர்களாக இருக்கிறோம். இன்னும் ஒருசிலர் இயேசுவை இன்னும் ஒரு குழந்தையாக பார்த்து வழிதவறிப்போய் விடுகிறார்கள். இன்னும் ஒரு சிலர் இயேசுவை ஒரு வரைபடத்திற்குள்ளாக இருப்பதாக கற்பனைபண்ணிக்கொள்கிறார்கள். இன்னும் ஒரு சிலர் அவரை இந்த உலகத்தில் பிறந்த அநேக மா மனிதர்களை போல அவரும் ஒருவர் என்று தவறாக கருதிகொள்ளுகிறார்கள். ஆனால் சத்தியமென்னவென்றால், இயேசுவின் அநேக தன்மைகளில் ஒன்று அவர் சர்வவல்லமையுள்ளவர்; அவர் எங்கும் நிறைந்திருப்பவர்; பிதாவின் வலது பாரிசத்தில் இருப்பவர்; பிதாவும் நானும் ஒன்றாக இருக்கிறோம் என்று சொன்னவர்; சர்வத்தையும் ஆளுகிறவர்; ஒன்றான மெய்த்தேவன் அவர்; பரலோகத்திலும் இயேசு தான் ராஜா, பூலோகத்திலும் இயேசு தான் ராஜா; அவர் ராஜாதி ராஜா; கர்த்தாதி கர்த்தர்; ஒருவராய் பெரிய காரியங்களை செய்கிறவர்.
பரலோகத்தில் திரளான ஜனங்கள் ஆரவாரத்தோடு, பெருவெள்ள இரைச்சலோடு, பலத்த இடிமுழக்கத்தோடு இயேசுவை சர்வவல்லமையுள்ளவர் என்று சொல்வதை பார்க்கிறோம். சர்வவல்லமையுள்ளவர் என்றால் அவருடைய வல்லமைக்கு முடிவே இல்லை, அவருடைய அன்பிற்கு முடிவே இல்லை, அவருடைய பரிசுத்தத்திற்கு முடிவே இல்லை, அவருடைய ஞானத்திற்கு முடிவே இல்லை, அவருடைய பலத்திற்கு முடிவே இல்லை. அவருடைய வல்லமை இவ்வளவுதான் என்று கணக்கிட முடியாது.
இயேசு சர்வ வல்லமையுள்ளவர் என்று ஒருவர் கூறும்போது படைப்பு அனைத்திற்கும் அவர் வரம்புகளை நிர்ணயித்தாலும், அவரே பலம், ஞானம், அன்பு, பரிசுத்தம் மற்றும் அவருடைய தெய்வீக தன்மை, தன் விருப்பத்தை நிறைவேற்றும் திறன் ஆகியவற்றில் எல்லையற்றவர் என்பதாக.
இன்னும் சொல்லப்போனால், நாம் காண்கிற இந்த பிரபஞ்சம் இயேசுவின் அற்புதத்தை வெளிப்படுத்துகிறது. அவர் பேசினார், டிரில்லியன் கணக்கான விண்மீன் திரள்கள் வெடித்தன, ஒவ்வொன்றிலும் பில்லியன் கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன. அறியப்பட்ட பிரபஞ்சத்தின் மிகப் பெரிய மற்றும் பிரகாசமான நட்சத்திரம் 8,700,000 சூரிய அலகுகளின் ஒளிர்வுடன், இது நமது சூரியனை விட 8,700,000 அதிக சக்தி வாய்ந்தது. இப்போது நமது சூரியன் பூமியின் அனைத்து ஆற்றலையும் வழங்குகிறது மற்றும் அதன் மையத்தில் சுமார் 14 மில்லியன் டிகிரியில் எரிகிறது. இந்த ஒரு சாதாரண படைப்பை நினைக்கும்போதே இயேசு எவ்வளவு பெரிய சர்வ வல்லமையுள்ளவர் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
வெளி 1:8ல் இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார் என்று வாசிக்கிறோம்.
இயேசுவை நீங்கள் எப்பொழுது உங்கள் வாழ்க்கையில் சர்வ வல்லவராக பார்கிறீர்களோ, அப்பொழுது உங்களுடைய மலை போன்ற பிரச்சனைகள் ஒன்றுமில்லாமல் போய்விடும். உங்கள் ஜெபங்களில் இயேசுவை சர்வ வல்லமையுள்ளவராக பாருங்கள். அப்பொழுது அவர் உங்களுக்காக சகலத்தையும் செய்து முடிப்பார்.
கர்த்தர் தாமே உங்களோடு கூட இருப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org