சிலுவையில் இயேசுவின் முதுகு(Jesus’ back on the cross):-

சங்கீதம் 129:3 உழுகிறவர்கள் என் முதுகின்மேல் உழுது, தங்கள் படைச்சால்களை நீளமாக்கினார்கள்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/It4y25VYrp8

சங்கீதம் 129ஐ மேசியாவின் சங்கீதம் என்று சொல்லுவார்கள். இயேசுவின் சிலுவை பாதையை குறித்து தீர்க்கதரிசனமாக வெளிப்படுத்தப்பட்ட ஆரோகண சங்கீதம்.

39 முறை வாரினால் இயேசுவை அடித்தார்கள். வரலாறு சொல்லுகிறது போர்ச்சேவகர்களின் வார் ஒரு அடி இரும்பினால் செய்யப்பட்டது. கயிறுகள் மிருகத்தின் தோலினால் செய்யப்பட்டது. 12 கொக்கிகள் அலுமினியத்தால் செய்யப்பட்டது. அதில் இரும்பு குண்டுகள் போடப்பட்டிருக்கும். அதை வைத்து ஒருமுறை அடிக்கும்போது சுமார் 200 இடத்தில் சரீரம் கீறப்படும். தோலும் சதையும் பிய்க்கப்படும். பொதுவாக இப்படி அடிக்கும்போது மூன்று காரியங்கள் நடக்கும். ஒன்று சுய நினைவு இழக்கநேரிடும், இரண்டு மன நலம் பாதிக்கப்படும், மூன்று மரணம் நேரிடும். ஆனால் இயேசுவுக்கு இவை ஒன்றும் உடனே சம்பவிக்கவில்லை. இயேசுவை மூன்று அடி தூணில் கட்டி வாரினால் அடித்தார்கள். 39 முறை அடிக்கும்போது முதல் தடவை மாத்திரம் தான் இயேசு சத்தமிட்டார். அதன் பின்பு அவர் வாயை திறக்கவில்லை.

இப்படியாக தேசாதிபதி ஆசாரியர்களை திருப்தி செய்யும் பொருட்டு இயேசுவை சாட்டையால் அடிக்க உத்தரவு போட்டான். விடியற்காலை வரை இயேசுவை தொடர்ந்து சாட்டையால் அடித்து அவரை அடையாளம் கண்டுகொள்ளமுடியாதவாறு இரத்தகாயப்படுத்தினர். இரத்தம் வடிந்துகொண்டிருந்த அவரது முதுகின் மீது ஒரு துணியால் போர்த்தினார்கள். துணி இரத்தத்தை உறிஞ்சி காயத்தோடு ஒட்டி காய்ந்த பிறகு, போர்த்திய துணியை வேகமாக எடுப்பார்கள். அப்படியாக எடுக்கும்போது இன்னும் முதுகை கிழித்துக்கொண்டு கொடிய வேதனையோடு இரத்தம் வரும்படியாக செய்தார்கள். இப்படியாக மீண்டும் மீண்டுமாக செய்தார்கள்.

பாரமான சிலுவையை இரத்தக்காயங்களால், கிழிக்கப்பட்ட தோளிலும் முதுகிலும் வைத்துக்கொண்டு சுமையைத் தாங்கமுடியாதவாறு தள்ளாடிய நிலையில் நகரத்திற்கு வெளியே மலையை நோக்கி நடந்து சென்றார். இப்படியாக இயேசுவின் முதுகு முழுவதுமாக பிய்க்கப்பட்டது. இந்த எல்லா வலிகளையும் வேதனையும் இயேசு உங்களுக்காக சகித்தார். உங்கள் பாடுகளை அவர் ஏற்றுக்கொண்டார்.

சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது (I கொரிந்தியர் 1:18 ).

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org