நீங்கள் விருத்தியடைவீர்கள்(You will grow greater).

தாவீது நாளுக்குநாள் விருத்தியடைந்தான்; சேனைகளின் தேவனாகிய கர்த்தர் அவனோடேகூட இருந்தார். (2 சாமு. 5:10).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/DITEwOy-Mwk

நீங்கள் விருத்தியடைந்து பெருகுவது தேவனுடைய திட்டமாகும். பலுகி, பெருகி, பூமியை நிரப்பவேண்டும் (ஆதி. 1:28), என்பது ஆதிபெற்றோராகிய ஆதாம் ஏவாளை குறித்த கர்த்தருடைய சித்தமாயிருந்தது. நம்முடைய முற்பிதாக்களை கர்த்தர் ஆசிர்வதித்து அவர்களை பெருகப்பண்ணினார். ஆபிரகாம் ஒருவனாய் இருக்கையில் அவனை அழைத்து அவனை பெருகப்பண்ணினார் (ஏசா. 51:2).  ஈசாக்கு ஐசுவரியவானாகி, வரவர விருத்தியடைந்து, மகா பெரியவனானான் என்று (ஆதி. 26:13) -ல் வாசிக்கிறோம். யாக்கோபு மிகவும் விருத்தியடைந்தான் என்று (ஆதி. 30:43)-ல் எழுதப்பட்டிருக்கிறது.

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே; அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள் நிமித்தம் தரித்திரரானாரே என்று (2 கொரி. 8:9) -ல் வாசிக்கிறோம். நீங்கள் ஆசிர்வதிக்கப்படும்படிக்கு இயேசு சிலுவையில் தரித்திரராய் தொங்கினார்.

தாவீது விருத்தியடைந்ததின் காரணம் சேனைகளின் தேவனாகிய கர்த்தர் அவனோடேகூட இருந்தார். கர்த்தர் உங்களோடு கூட இருக்கும் போது நீங்கள் விருத்தியடைந்து பெருகுவீர்கள். சவுலின் குடும்பத்துக்கும் தாவீதின் குடும்பத்துக்கும் நெடுநாள் யுத்தம் நடந்தது; தாவீது வரவரப் பலத்தான், சவுலின் குடும்பத்தாரோ வரவரப் பலவீனப்பட்டுப் போனார்கள் (2சாமு-3:1). காரணம் சேனைகளின் காத்தர் சவுலின் வீட்டாரோடு காணப்படவில்லை. ஆகையால் பலவீனப்பட்டு போனார்கள்.

யூதாவிலும், இஸ்ரவேலிலும் தோன்றின அனேக ராஜாக்கள் அவர்கள் பலப்பட்டபோது தேவனை மறந்தார்கள். ஆனால் தாவீது கடைசிமட்டும் நன்றியறிதலுள்ளவனாகக் காணப்பட்டான்.

சேனைகளின் காத்தர் உங்களோடிருப்பதை உறுதிசெய்யுங்கள். அவர் செய்த நன்மைகளுக்கு நன்றியுள்ளவர்களாய் காணப்படுங்கள். கர்த்தர் உங்களை ஆசிர்வதித்து மென்மேலும் பெருகப்பண்ணுவார்.

கர்த்தர் தாமே உங்களை ஆசிர்வதிப்பாராக!

Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *