ஆபத்துக்காலத்தில் சோர்ந்துபோகாதே (Do not faint in the day of distress)

நீதி 24 : 10 ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்துபோவாயானால், உன் பெலன் குறுகினது.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/4CcIW5Lit00

சோதனைகளும் துன்பங்களும் வரும்போதுதான் நாம் உண்மையில் பெலமுள்ளவர்களா இல்லையா என்பதை அறிந்துகொள்கிறோம். அதனால்தான் தேவன் நம் வாழ்வில் சோதனைகளையும் துன்பங்களையும் அனுமதிக்கிறார்; ஏனெனில், அப்போதுதான் நாம் உண்மையில் ஆவிக்குரியவர்களா இல்லையா என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது. விசுவாசிகளில் பலர் கூட துன்பமான நாட்களில் சோர்ந்துபோகிறார்கள். அதற்குக் காரணம் அவர்களின் பலவீனம் தான்.

ஏமி கார்மைக்கேல் சொன்னார்கள் : “இனிமையான நீரால் நிரம்பிய ஒரு கோப்பையை எவ்வளவு அசைத்தாலும், அதிலிருந்து கசப்பான நீரின் ஒரு துளி கூட வெளியே சிந்தாது.” யாராவது நம்மை பலமாக அசைக்கும்போது, நம் வாயிலிருந்து கடுமையான மற்றும் கசப்பான வார்த்தைகள் வெளிவந்தால், அது எதைக் குறிக்கிறது? நம் வாழ்நாள் முழுவதும் நாம் கசப்பான நீர் நிரம்பிய ஒரு கோப்பையைத்தான் சுமந்து கொண்டிருந்தோம் என்பதை அது குறிக்கிறது. ஆகையால், உங்களை அசைத்து கலங்கடித்த அந்த நபர் மீது கோபப்படுவதற்குப் பதிலாக, “அன்பு சகோதரரே, உங்களுக்கு நன்றி; நான் என்னை நானே ஏமாற்றிக்கொண்டு வாழ்ந்திருப்பேன்; ஆனால் உங்கள் மூலமாக என் உள்ளத்தில் இவ்வளவு காலம் கசப்பான நீரைச் சுமந்து கொண்டிருந்தேன் என்பதை நான் கண்டுகொண்டேன்” என்று சொல்ல வேண்டும். மாத்திரமல்ல, தேவன் நம்மைத் தேவதூதர்களுக்குக் காண்பித்து இப்படிச் சொல்ல விரும்புகிறார்: “என் பிள்ளை எப்படி நடந்துகொள்கிறான் என்று பாருங்கள் – எல்லாம் சுலபமாக நடக்கும்போது மட்டுமல்ல, நெருக்கடி மற்றும் துன்பமான நேரங்களில் அவன் எப்படி நடந்துகொள்கிறான், எப்படிப் பேசுகிறான், அவனது நாவிலிருந்து ஞானம் எப்படி வெளிப்படுகிறது என்று பாருங்கள் என்பதாக .”

ஒருவேளை நம் வாழ்க்கை மிகவும் சுமூகமாக இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். சோதனைகள் இல்லை, துன்பங்கள் இல்லை, யாரும் புறம் பேசுவதில்லை, யாரும் எதிராகப் பேசுவதில்லை, பண நெருக்கடி இல்லை, நோய் இல்லை, எந்தப் பிரச்சினையும் இல்லை. அப்படி 50 ஆண்டுகள் வாழ்ந்துவிட்டு, நாமே ஆவிக்குரியவர்கள் என்று நினைத்துக்கொண்டு, கிறிஸ்துவின் நியாயாசனத்தின் முன் நிற்கும்போது, ஒருவேளை நாம் உண்மையாகவே மனந்திரும்பவில்லை என்றோ அல்லது மனந்திரும்பியிருந்தாலும் மாம்ச சுபாவம் கொண்டவர்களாகவே இருக்கிறோம் என்றோ கண்டறிய நேரிடலாம். பல ஆண்டுகளாக நாம் ஏமாற்றப்பட்ட நிலையில் இருக்க தேவன் அனுமதிக்கவில்லை என்பது நல்லதல்லவா? கிறிஸ்துவின் நியாயாசனத்தின் முன் நிற்பதற்கு முன்பாகவே, இதைச் சரிசெய்ய உனக்கு உதவவே நான் வந்திருக்கிறேன்,” என்று இயேசு கூறுகிறார். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

ஆபத்துக்காலத்தில் சோர்ந்துபோகாதிருங்கள். ஆபத்து வராது என்று தேவன் கூறவில்லை. ஆபத்து வரும்போது நாம் சோர்ந்துபோகாமல் இருக்கவேண்டும். மாறாக அதற்காக நன்றி செலுத்துங்கள். காரணம் நம் ஆண்டவர் சோர்ந்துபோகிறவனுக்கு பெலனளிக்கிறவர்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *