ஸ்தோத்திரியுங்கள் (Bless and Praise the Lord)

சங் 135:19,20 இஸ்ரவேல் குடும்பத்தாரே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்; ஆரோன் குடும்பத்தாரே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள். லேவி குடும்பத்தாரே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்; கர்த்தருக்குப் பயந்தவர்களே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்.

For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/5JFbDiA1CpE

மேற்குறிப்பிட்ட வசனத்தில் நான்கு பிரிவான ஜனங்கள் கர்த்தரை ஸ்தோத்தரிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முதலாவதாக, இஸ்ரவேல் குடும்பத்தாரே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரவேல் என்பது ஒரு தேசம். அந்த தேசத்தில் குடியிருக்கும் குடும்பத்தார்கள் அனைவரும் கர்த்தரை ஸ்தோத்தரிக்க வேண்டும். இரண்டாவதாக, ஆரோன் குடும்பத்தாரே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆரோன் பிரதான ஆசாரியன். ஆரோன் ஆண்டவரால் தெரிந்துகொள்ளப்பட்ட முதல் பிரதான ஆசாரியன். அவனும் அவனுடைய குடும்பமும் கர்த்தரை ஸ்தோத்தரிக்க வேண்டும் என்று வசனம் கூறுகிறது. மூன்றாவதாக, லேவி குடும்பத்தாரே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. லேவி என்பவன் யாக்கோபு லேயாளுக்கு பிறந்த ஆறு குமாரர்களில் மூன்றாவதாக பிறந்தவன். ஆரோன், மோசே மற்றும் மிரியாம் போன்றவர்கள் லேவி கோத்திரத்தில் வந்தவர்கள். தேவன் சொன்னார் நான் லேவியரை இஸ்ரவேல் புத்திரரிலிருந்து எடுத்துக்கொண்டேன்; அவர்கள் என்னுடையவர்களாயிருக்கிறார்கள். அவர்கள் ஆரோனுக்கு பணிவிடை செய்யக்கடவர்கள் என்பதாக. அவர்களும் கர்த்தரை ஸ்தோத்தரிக்க வேண்டும் என்று எழுதப்பட்டிருக்கிறது. நான்காவதாக, கர்த்தருக்குப் பயந்தவர்களே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவருடைய வசனத்துக்கு நடுங்குகிறவனையே நான் நோக்கிப்பார்ப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். அவருக்கு பயந்தவர்கள் நிச்சயமாக என்ன நடந்தாலும் கர்த்தரை ஸ்தோத்தரிப்பார்கள்.

இப்படியாக நாம் எல்லாரும், எல்லா சூழ்நிலைகளிலும், எல்லா நேரங்களிலும் ஆண்டவரை ஸ்தோத்தரிக்க பழகிக்கொள்ள வேண்டும். தாவீது சொல்லுகிறான் கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்தரிப்பேன் என்பதாக. ஸ்தோத்திரம் செலுத்துகிறவன் கர்த்தரை மகிமைப்படுத்துகிறான். ஒரு ஊழியக்காரர் சொன்னார், யாருக்கு எல்லா சூழ்நிலையிலும் முறுமுறுக்காமல் ஸ்தோத்திரம் செலுத்திகிற உள்ளம் இருக்கிறதோ, அவர்களுக்கு கர்த்தர் இரகசியங்களை வெளிப்படுத்திகிறார் என்பதாக. யோபு சொல்லுகிறான் தேவனுடைய இரகசிய செயல் என் வாழ்க்கையில் இருந்தது என்பதாக. கர்த்தர் உங்கள் வாழ்க்கையில் செய்த நன்மைக்காகவும், செய்ய போகிற நன்மைக்காகவும் இப்பொழுதே ஸ்தோத்திரம் செய்யுங்கள். அப்பொழுது கர்த்தர் உங்களுக்கு அளவில்லாத கிருபைகளை தருவார்.

எருசலேமில் வாசம்பண்ணுகிற கர்த்தருக்கு சீயோனிலிருந்து ஸ்தோத்திரமுண்டாவதாக. அல்லேலூயா.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *