2 சாமு 6:20. தாவீது தன் வீட்டாரை ஆசீர்வதிக்கிறதற்குத் திரும்பும்போது, சவுலின் குமாரத்தியாகிய மீகாள் தாவீதுக்கு எதிர்கொண்டுவந்து, அற்பமனுஷரில் ஒருவன் தன் வஸ்திரங்களைக் கழற்றிப்போடுகிறதுபோல, இன்று தம்முடைய ஊழியக்காரருடைய பெண்களின் கண்களுக்குமுன்பாகத் தம்முடைய வஸ்திரங்களை உரிந்துபோட்டிருந்த இஸ்ரவேலின் ராஜா இன்று எத்தனை மகிமைப்பட்டிருந்தார் என்றாள்.
மீகாள் சவுலின் குமாரத்தி, தாவீதின் முதல் மனைவி. மீகாளுக்கு தேவனை குறித்த அறிவோ, வைராக்யமோ, வாஞ்சையோ இருக்கவில்லை. அவள் ஆண்டவரை பாடுவதை கூட அற்பமாய் எண்ணுபவள். ஆடம்பர மோகத்தில், அரண்மனை சுகத்தில், அதிகார போதையில் வாழ்ந்தவள்.
தாவீது வீரன் என்பதனால், நல்ல சவுந்தரியமான சிவந்த மேனியுள்ளவன் என்பதனால், சுரமண்டலம் வாசிப்பதில் நிபுணர் என்பதனால், கர்த்தர் அவனோடு கூட இருந்ததை மீகாள் அறியாமல் போனால்.
அவள் பெயரின் அர்த்தத்தின்படி நான் என்ற மேட்டிமையோடு, யார் பூரணப்பட்டவர்? (who resembles God?, Who is perfect ), நான் சொல்லுவது தான் சரி, என் இஷ்டப்படி தான் இருப்பேன், என் சுய கருத்துக்கள் தான் பெரியது என்பவளை போல வாழ்ந்தவள். இப்படித்தான் அநேகர் இந்நாட்களில் தங்களை நினைத்துக்கொள்ளுகிறார்கள். யாரவது வேதத்தின் படி ஒரு அறிவுரை கூறினால் அதை ஏற்றுக்கொள்வதற்கு மனமில்லை, நான் நினைப்பது தான் சரி என்றும், வேதத்தை குறித்து ஒரு தெளிவு இல்லாமல் போன அநேக விசுவாசிகளும் உண்டு. இப்படிப்பட்டவர்களுக்கு ஆண்டவர் ஒருபோதும் உதவி செய்ய இயலாது. மாறாக, நான் இன்னும் வேதத்தின் ரகசியங்களை அறிந்து, கற்று கொண்டு என்னை திருத்திக்கொள்ள முன் வருகிறேன் என்று சொல்லுபவர்களுக்கு கர்த்தர் உதவி செய்வார்.
மீகாள் இப்படிக்கொண்ட கடின நெஞ்சம் இருந்ததினால், கர்த்தர் அவளுக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் செய்தார். பின்பு சவுல் தாவீதை ஏமாற்றும் படிக்கு தன் மகள் மீகாளை வேறொருவனுக்கு மனைவியாகி கொடுக்கிறான். அவனுக்கும் அவள் பிள்ளை பெறவில்லை.
தேவ ஜனமே தேவனை குறித்து பக்தி வைராக்கியம் இல்லாமல், வேதத்தை ஆராய்ந்து படித்து அதின் படி வாழ முயற்சிக்காமல் என்னுடைய மனசாட்சியின் படி வாழ்வேன் என்று சொல்பவர்களுக்கு கர்த்தருடைய ஆசீர்வாதம் தடைபட்டுபோகும்.
மீகாளை போல இல்லாமல் உங்களை தாழ்த்தி, அவர் சத்தத்துக்கு செவிகொடுக்க முன்வாருங்கள், உங்களை அர்பணித்துக்கொள்ளுங்கள். அப்பொழுது கர்த்தருடைய நிறைவான ஆசிர்வாதத்தை பெற்றுகொள்ளுவீர்கள்.
கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org