இயேசுவின் மீது உமிழ்ந்தார்கள்:-

ஏசா 50:6. அடிக்கிறவர்களுக்கு என் முதுகையும், தாடைமயிரைப் பிடுங்குகிறவர்களுக்கு என் தாடைகளையும் ஒப்புக்கொடுத்தேன்; அவமானத்துக்கும் உமிழ்நீருக்கும் என் முகத்தை மறைக்கவில்லை.

இயேசுவின் முதுகில் அடிப்பதற்கும், அவருடைய தாடை மயிரை பிடுங்கவும் இயேசு அவராகவே தன்னை ஒப்புக்கொடுத்தார் என்று வசனம் சொல்லுகிறது. ஒருவன் செய்த தவற்றிக்கு, தண்டனையை வேறொருவன் அனுபவிக்குமாறு மற்றொருவன் சொல்லி செய்வது அது வற்புறுத்தலாக கருதப்படும். ஆனால் இயேசு யார் சொல்லியும், யார் வற்புறுத்தியும் நமக்காக, அடிக்கிறவர்களுக்கு முதுகையும், பிடுங்குகிறவர்களுக்கு தன் தாடையையும் கொடுக்கவில்லை. மாறாக, தானாகவே அந்த தண்டனையை ஏற்றுக்கொண்டார்.

ஒரு ஊரில் சாதாரண ஒரு பெண்ணுக்கும், மிகப்பெரிய செல்வந்தர்க்கும் எதார்த்தமாக மிக பெரிய வாக்குவாதம் நேரிட்டது. அவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் வாக்குவாதத்தை ஊர் ஜனங்கள் எல்லாரும் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அந்த செல்வந்தர், சாதாரண செல்வந்தர் மாத்திரமல்ல, அவர் ஊர் ஜனங்களுக்கு தலைவரும் கூட. அப்படியிருக்க எதிர்த்து சண்டையிட்டு கொண்டிருந்த அந்த பெண்மணி நீயெல்லாம் ஒரு மனுசனா என்று சொல்லி அவரை நோக்கி தரையில் காரி துப்பினாள். அதை பார்த்துக்கொண்டிருந்த ஜனங்கள் எல்லாரும் அதிர்ந்துபோனார்கள். அந்த செல்வந்தர்களோ பெரிய அவமானமாகவும், வெட்கமாகவும் போய்விட்டது. சாதாரண பெண்மணி எல்லாருக்கும் முன்பாக காரி துப்பிவிட்டாலே என்று சொல்லி அவருடைய மனம் கொதித்தது. இப்படியாக யாரவது நமக்கு முன்பாக, நம் மேல் அல்ல, நமக்கு முன்பாக கீழே காரி துப்பினாலே நம்மால் பொறுத்துக்கொள்ள முடியாது.

ஆனால் இயேசுவின் மீது உண்மையாகவே அவருடைய முகத்தில் எல்லாருக்கும் முன்பாக உமிழ்ந்தார்கள். அப்பொழுது, அவருடைய முகத்தில் துப்பி, அவரைக் குட்டினார்கள்; சிலர் அவரைக் கன்னத்தில் அறைந்து: கிறிஸ்துவே, உம்மை அடித்தவன் யார்? அதை ஞானதிருஷ்டியினால் எங்களுக்குச் சொல்லும் என்றார்கள் (மத் 26:67,68). இயேசுவின் மீது துப்பினார்கள் என்று சாதாரணமாக எண்ணி விடாதிருங்கள். இயேசு பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவர்; பிதாவுக்கு சமமாக இருப்பவர்; ஒருவரும் சேரக்கூடாத ஒளியில் வாசம் செய்கிறவர்; அக்கினிமயமானவர். அப்படிப்பட்டவர் மீது சாதாரண பாவத்தில் வாழும் ஜனங்கள் துப்பினார்கள். எல்லாருக்கும் முன்பாக அவமானப்படுத்தப்பட்டார். இவையெல்லாம் உங்களுக்காக இயேசு சிலுவையில் சகித்தார். நீங்கள் மற்றவர்களுக்கு முன்பாக அவமானப்பட்டுவிட கூடாது என்று சொல்லி அவர் உங்களுக்காக அவமானப்பட்டார். உங்களுக்காக, உங்கள் மீது வைத்த அன்பினிமித்தமாக, அவமானத்துக்கும் உமிழ்நீருக்கும் அவர் முகத்தை மறைக்கவில்லை.

கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
www.wogim.org
Doha, Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *