அழுது புலம்பு(Weep and mourn):-

யோவேல் 2:12 ஆதலால் நீங்கள் இப்பொழுதே உபவாசத்தோடும் அழுகையோடும் புலம்பலோடும் உங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்புங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/qhFz77bikhM

தேவ ஜனமே தேசத்திற்காக, தாய் நாட்டிற்காக, ஜனங்களுக்காக புலம்பி அழு. கண்ணீர் விட்டு மன்றாடு. தலையனை கண்ணீரால் நிறையத்தக்க அளவுக்கு கண்ணீர் விட்டு அழு, புலம்பு, உபவாசம் இரு. தேசம் கயவர்களின் கையிலிருந்து மீட்கப்பட தேவனிடம் புலம்பி அழு. துன்மார்க்கரின் ஆக்கிரமிப்பிலிருந்து தேசம் தப்பித்துக்கொள்ள புலம்பி அழு. தேசம் எழுப்பதலடைய கதறு. அடக்கி கொள்ளாதே. மதுபானத்திற்கு அடிமையானவர்கள் விடுதலைபெற புலம்பி அழு. வேசித்தனத்திலிருந்து விபச்சாரத்திலிருந்து ஜனங்கள் விடுதலை பெற புலம்பி அழு. விக்கிரகத்தின் பிடியிலிருந்து, ஜனங்கள் தப்பித்துக்கொள்ள கண்ணீர் சிந்தி ஜெபி. முழங்காலை முடக்கு. கண்ணீர் சிந்தி ஜெபி. தேவனுக்கு நேராக கரங்களை உயர்த்து. போராடி ஜெபி. ஜனங்கள் அழிக்கப்பட்டு போகாதபடிக்கும், தேவகோபம் ஆறும்படியாகவும் திறப்பின் வாயிலிலே நில்லு. உன் இருதயத்தை தேவனிடம் ஊற்று. வெறும் வாயின் வார்த்தையினால், ஏனோதானோவென்றுமல்லாமலும், உன் இருதயத்தை தேவனிடம் ஊற்று. அழுது புலம்பி ஜெபி. கண்களுக்கு நித்திரை வரவிடாதே. இன்னும் கொஞ்சம் தூங்கிக்கொள்ளுகிறேன் என்று தரித்திரத்திற்கு இடம் கொடாதே. அயராது ஜெபி. உன்னை நீயே விடுவித்துக்கொள். தளராதே. ஜெபிக்க சோர்ந்து போகாதே. சோம்பலுக்கு இடம் கொடாதே. எழுந்து போரடி.

ஆபாசப்படங்களில் நடிப்பவர்களும், அதை எடுப்பவர்களும் இரட்சிக்கப்பட அழுது புலம்பு. கொலை பாதகர்களை இயேசு சந்திக்கும்படியாக புலம்பி அழு. திருடர்கள் மனம் மாற அழுது புலம்பு. வலதுகைக்கும் இடது கைக்கும் வித்தியாசம் தெரியாத கோடிக்கணக்கான ஜனங்களின் கண்கள் திறக்கப்படவும், மெய்யான இயேசுவை தடவியாகிலும் கண்டுகொள்ளத்தக்க அழு. விடாமல் அழுது ஜெபி.

மோசேயை போல கர்த்தருடைய இரக்கத்திற்க்காக கெஞ்சிபிரார்த்தனை பண்ணு. கர்த்தர் தமது வசனத்தை அனுப்பி ஜனங்களை குணமாக்க அவரிடம் கெஞ்சு. மீறி பாவம் செய்த ஜனங்கள் மீது தேவ கோபம் வெளிப்படாமல் அவர் மனஸ்தாப படும்படியாக கெஞ்சி ஜெபம் பண்ணு. ஜனங்களின் சீர்கேட்டை கர்த்தர் திருப்பும்படியாக உள்ளம் உடைந்து ஜெபி. தேசத்தின் ஜனங்களின், தலைவர்களின், ஊழியக்காரர்களின், விசுவாசிகளின் பரிசுத்தத்திற்காக கெஞ்சு. மீறுதலினிமித்தம் தீங்கு வரதபடிக்கு கர்த்தர் ஜனங்கள் மேல் பரிதாபம்கொள்ளும்படி ஜெபி. பின்வாங்கி போகாதே. ஜெபத்தை நிறுத்தாதே. அழுது போரடி ஜெபி. நீ போகவேண்டிய தூரம் வெகு அதிகம். எழுப்புதலை தூரத்திலிருந்து கேட்கிறவனாக அல்ல, உன்னை கர்த்தர் எழுப்புதலின் பாத்திரமாக பயன்படுத்த ஒப்புக்கொடுத்து ஜெபி. தேசத்திற்காக நதியளவு கண்ணீர் சிந்தி ஜெபி. நீ தான் கர்த்தர் தேடும் நபர் என்பதை உணர்ந்துகொள்.

கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org