திரும்ப அளிப்பேன்(I will restore to you):-

யோவேல் 2 : 25. நான் உங்களிடத்தில் அனுப்பின என் பெரிய சேனையாகிய வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/tgwH0u0Kjos

நாம் ஆராதிக்கிற தேவன் இழந்து போனதை திரும்பவும் கொடுப்பவர். அநேகர் வேலைகளை இழந்திருக்கலாம்; சம்பளம் குறைக்கப்பட்டிருக்கலாம்; எதிர்பாராத செலவுகள் வந்திருக்கலாம், என்ன நடந்தாலும், கர்த்தருடைய வசனம் மாறாது. வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும் கர்த்தருடைய வசனம் ஒழிந்து போவதில்லை. அவருடைய வசனம் என்றென்றைக்கும் வானங்களில் நிலைத்திருக்கிறது (சங்கீதம் 119:89 ). அவர் தம்முடைய வசனத்தினால் சர்வத்தையும் தாங்குகிறார். அவர் பொய்யுரையாத தேவன். ஆகையால் சூழ்நிலைகளை பாராமல் கர்த்தருடைய வசனத்தின்மீது விசுவாசம் வையுங்கள்.

யோபுக்கு இழந்துபோன எல்லா ஐசுவரியாதையும் கர்த்தர் ரட்டிப்பாக அவனுக்கு கொடுத்து மகிழப்பண்ணினார். உங்களுக்கும் ரட்டிப்பான நன்மையை அளித்து மகிழப்பண்ணுவார். வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் பட்சித்து போட்ட உங்கள் செல்வங்களையும், ஆஸ்தியையும், பதவியையும் கர்த்தர் உங்களுக்கு திரும்பவும் தருவார். நீங்கள் திரும்பவும் கட்டப்படுவீர்கள்.

இஸ்ரவேல் என்னும் கன்னிகையே, மறுபடியும் உன்னைக் கட்டுவிப்பேன், நீ கட்டப்படுவாய்; மறுபடியும் நீ மேளவாத்தியத்தோடும் ஆடல்பாடல் செய்கிறவர்களின் களிப்புள்ள கூட்டத்தோடும் புறப்படுவாய் (எரேமியா 31:4 ) என்ற வசனத்தின்படி கர்த்தர் உங்களை கட்டுவார்.

கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org